மரண தண்டனை தீர்வா ?
சமூக நீதியை உள் கிடக்கையாக கொண்ட திராவிட மாடல், வளர்ந்து வரும் ஜனநாயக அரசுகள் மருதலிக்கும் மரண தண்டன மூலம் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழைய நிலபிரமபுத்துவ பழிவாங்கும் மரபார்ந்த மரண தண்டனையை ஊக்குவிப்பது சரியல்ல. முதல் உலகப்போர் இரண்டாம் உலகப் போர்களுக்கு பிறகு (உலகம் மன்னர் ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும்+மன்னர் ஆட்சிக்கும் சோசலிசத்துக்கும் போட்டியாக போர்கள்) அடுத்தடுத்த இலக்குகள் நோக்கி அரசுகளையும், மக்களையும் கொண்டு சேர்த்திருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் பெரும்பாலான நாடுகள் மன்னராட்சி இருந்தால் கூட ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தும் சட்ட வடிவங்களை அங்கீகரித்து உள்ளன. ஆனால் சமூக நீதிப் பேசக்கூடிய திராவிடல் மாடல் அரசு தனி மனிதர்கள் தங்கள் நினைத்ததும் ஆங்காரமான செய்யக்கூடிய மரண தண்டனையை ஊக்குவிக்கிறது. வீழப்போகும் அரசு தன்னை தற்காத்துக் கொள்ள, மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை சலுகைகளை சட்டங்களை கொண்டு வருவது இயல்பு. அனைய போற விளக்கு பிரகாசமாக எரியு ம் என்பது போல. அப்படித்தான் கடந்த காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்ப...