இடுகைகள்

அமுதகலசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமுத கலசம் இதழில் "மீட்புப் காலம்"...

படம்
மீட்புக்காலம்...?! சூழலியல் சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், துணுக்குகள், செய்திகள், தொலைக்காட்சிகளில் காணும் பேரிடர் போன்றவை சமுகத்தின் பொது புத்தி பயமுறுத்துவதாக உள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் இழந்து விட்டதாக மனித குலம் இனி பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று அலறுகின்றன. மனிதர்கள் உள்ளிட்ட உலகின் மொத்த உயிரினத் தொகுதியும் அற்றுப்போகும் என பதறுகின்றனர். மனிதகுலம் பழைய நிலைக்கு போக வேண்டும் என்ற கருத்தாக்கம் நொடிக்கு ஒரு முறை போதிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளே சுற்றுச்சூழலை கெடுக்கிறது என்கின்றனர். இப்படியான செய்திகள் தனிநபராகவோ, குறுங்குழுவாகவோ, கார்ப்பரேட் லாபியாகவோ மிகத் தீவிரமாக அரைகுறையாக, சமூக ஊடகங்கள் வழியாக வியாபிக்கிறது. இன்றை நாளில் சில அற்ப விஷயங்களை கூட பெரிதுபடுத்தி பார்ப்பது, பெரிய விஷயங்களை அற்ப விஷயங்களாக கருதி கொள்வது மலிந்து விட்டன. சிந்தனைத் தெளிவென்றி ஆழமாக உணர்ந்தறியாமல் நுனிப்புல் மேய்ந்தவாறு புரிந்தமாதிரி கடக்கிறோம். நம்மை சூழ்ந்து இருக்கக்கூடியதும், எல்லோருக்கும் பொதுவான, யாரும் உரிமை கொண்டா...

அமுத கலசம் இதழில் "சமூக துரோகம்"...

படம்
இன்றைய நவீன யுகத்தில் அறிவு என்பது பரவலானதும் எல்லோரின் கைகளிலும் உடனடியானதுமாக உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் 'கூகுள் பண்ணு' என்று நாம் வளர்ந்திருக்கிறோம். அதோடு whatsapp, X தளம் போன்ற சமூக வலைத்தளங்கள், யூடியூப், ரீல்ஸ் போன்ற காணொளி காட்சிகள் மூலமாக விரைவான செய்திகளை உடனுக்குடன் தகவல்கள் சரியாகவோ சரிக்கு நெருக்கமாகவோ நம்மை வந்தடைகின்றன. போதாக்குறைக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் போன்ற நுண்ணறிவு அல்காரிதம் நம்மை வழிநடத்துகிறது. இணைய வழியில் நாம் எதை அதிகமாக நுகர்கிறோமோ அதன் வழி நடத்தப்படுகிறோம், என்று சொன்னால் பொருத்தம் இருக்காது. இணையத்தின் மூலம் நம்மை வழிநடத்தி வருமானத்தை எய்துவதோடு, மூளைச் சலவை செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் அறிவு நிலையை பொறுத்து பல்வேறு பட்ட நுகர்வுகளுக்கு பல தரப்பாக சுவைபட வழங்குகின்றனர். எப்படி இந்தி தொலைக்காட்சி நாடகங்கள் தமிழ் டப் செய்யப்பட்டு நமது பண்பாடு, மொழியை சுரண்டுகிறதோ அதுபோல், வளர்ந்த பெரு நிறுவனங்கள் மனிதனை அறிதல் புரிதல் நிலையிலிருந்து விலக்கி நுகர்வை திணித்து வசியப்படுத்துக...