பாசிசம் ஒரு விவாதம்

இந்தியாவில் தற்போது அரசியல் பண்பாட்டுத் தளங்களில் மேலாதிக்கம் பெற்றுள்ள பாசிசம் எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் நுட்பமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பாசிசம் குறித்த அண்மைக்கால ஆய்வுகள் நமக்குப் பயன்படும். பாசிச அரசை நிறுவுவதில் கருத்தியல்சார் அரசு சாதனங்கள் (Ideological State Apparatuses) முதன்மையான பாத்திரத்தை வகிக்கின்றன. அவை அடக்குமுறைசார் அரசு गान (Repressive State Apparatuses) போலிஸ் , ராணுவம் முதலானவற்றிலிருந்து விலகிச் சுயேச்சையாகச் செயல்படுகின்றன. பாசிசத்தின் பிடியிலிருந்து அடக்குமுறைசார் அரசு சாதனங்களை விடுவித்தால் அது கருத்தியல்சார் அரசு சாதனங்களில் பதுங்கிக்கொண்டு மீண்டும் அடக்குமுறைசார் அரசு சாதனங்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அங்கே தனது பணியைத் தொடர்ந்து செய்யும். 1970களின் பின்பகுதியில் ஜனதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசாங்கத்தைக் கையாளும் ஆட்சி அதிகாரத்துக்குள் ஊடுருவிய பாசிஸ்டுகள், ஆட்சி அதிகாரம் போன பிறகு சிவில் சமூகம் எனப்படும் கல்வி, குடும்பம், ஊடகம், சமயம், அரசியல் கட்சிகள் முதலான கருத்தியல்சார்...