இடுகைகள்

நூல் அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய கிராமம் - நூல் அறிமுகம்

படம்
#இந்திய_கிராமம் ஆசிரியர் (இந்தி மூலம்) :  இரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி மொழிபெயர்ப்பு : நாணற்காடன் முதல் பதிப்பு: பிப்ரவரி - 2025 வெளியீடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை மாவட்டக்குழு பக்கம் 64 - ₹. 70/- சுதந்திரத்திற்கு முன் உள்ள இந்திய கிராமங்களில் குறுக்கு வெட்டு தோற்றத்தை, பொருளாதாரப் போக்கு சமூக கட்டுமானம், அதிகாரம், கடமை, உரிமை, வழிபாடு, கல்வி அரசியல் என எல்லாவற்றையும் இயங்கியல் வழியில் ஆய்வு செய்து சுருக்கமாக நமக்குத் தரும் சிறு நூல் இது. இந்தியா முழுமைக்கும் பொதுவான புரிதலில் புரிந்து கொள்ளக்கூடிய எளிய தமிழில் மொழிபெயர்ப்பாளர் நாணற்காடன் சிறப்பு பணியை செய்திருக்கிறார். நூலின் ஆசிரியர் ரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி கர்நாடகாவை சேர்ந்த முனைவர் அறிவியல் வகைப்பட்ட ஆய்வு முறையில் இந்திய கிராமங்களில் போக்கை அதன் பொருளாதார அடித்தளத்தை அதன் மீது கட்டப்பட்டுள்ளது சாதி மதம் அதன் மீது கட்டப்பட்ட அரசியலை வகைப்படுத்தி உள்ளார். குறிப்பாக சூத்திரர்களின் கடந்த கால போக்குகளையும் அதன் மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சாதுரியமாக தவிர்த்ததையும் ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார். அம்ப...

புத்தனின் அரிவாள் - கவிதைகள் - அறிமுகம்

படம்
புத்தனின் அரிவாள் - கவிதைகள்  அ. நிலாதரன் - ஆசிரியர்  முதல் பதிப்பு : டிசம்பர் -2024 கொம்பு பதிப்பக வெளியீடு - 2024  ₹100 - பக்கம் 64  நிலாதரனின் கவிதைகள், எரியும் குடிசைக்குள்ளிருந்து ஓடிவந்திருப்பவை; உழவுக்குப் போகாத ஏர்க்கலப்பையில் பூக்கும் பேய்க்காளன் போன்றவை. தம் துருவேறிய கதிர் அரிவாள்களை, மொழியில்வைத்துத் தீட்ட முயல்வதின் வழியே இவர் கவிதைகளை உருவாக்குகிறார். வரலாற்றின் ரத்தவாடை மிகுந்த தன் நிலத்தின் கடந்தகால நினைவுகளை மீட்டி, இந்த நூற்றாண்டுக்கான அரசியலை தன் கவிதைகளில் முன்வைக்கிறார். அதன் ஒரு பகுதியாகத்தான். உழைக்கும் மக்களின் கழனிப் பக்கமாக வரும் புத்தனின் கைகளில் அரிவாளைத் திணிக்கிறார். இந்த நூற்றாண்டு வாழ்க்கையின் ஒரு துண்டுக் காட்சியின் வழி. தமிழ்ச் செவ்விவியல் மரபையும் நிலாதரனின் இக்கவிதைகள் சித்திரமாக்கியுள்ளன. நம் திணைசார் வாழ்க்கை அதன் ஈரப்பதத்துடன் வரையப்பட்டுள்ளது. வேட்டைக்குத் தப்பிய புலியைப் போன்ற கொடுங்காமம். கவிதை வரிகளுக்கு இடையே பதுங்கித் திரிவது உயிர்த் தீயைச் சுட்டெரிக்கிறது. விடுதலை வேட்கையுள்ள வர்க்கத்தின் மூர்க்கம்கொண்ட மொழியும், கட்டுக்க...

அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்

படம்
அடடா அருமையான மொழிபெயர்ப்பு. வேகமாக நகர்கிறது அம்பேத்கர் ஆக்கங்கள். முற்போக்கு இலக்கியங்கள் பரவலாக சென்றடையாமல் போனதற்கு முக்கிய காரணிகளில் மொழிபெயர்ப்பும் ஒன்று. பலமுறை அம்பேத்கரின் நூல்களை படிக்கும் போது ரஷ்யாவில் இருந்து மலிவுலை பதிப்பாக ராதுகா பதிப்பகத்தின் நூல்களை, இரண்டு பக்கங்களை படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் . அம்பேத்கர் நூலும் விதிவிலக்கல்ல. தட்டையான நேரடி மொழிபெயர்ப்பும், மராத்தியிலிருந்து ஆங்கில வழியாக தமிழுக்கு மொழி பெயர்த்ததும் தட்டையாகவே இருந்தது. பெரிய பராக்களாக படிக்கும்போது சோர்வாகவும் முழு பொருளை நினைவில் நிற்காமல் மறந்து விடும் உண்டு. கடந்த முறை அச்சிடப்பட்ட நீல அட்டை போட்ட கனத்த நூல்கள் கூட இந்த வகையினமே. பெரியார் தாசன் சித்தார்த்தன் என்ற புனைப்பெயரில் மொழிபெயர்த்த தாய்லாந்து பௌத்த சொசைட்டி உதவியுடன் வெளிவந்த 'தம்மம்' ஒரே மூச்சியில் படித்த நூல். அதேபோல ஆர் எஸ் சர்மா எழுதிய சூத்திரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முழுமை பெற்ற நூல். பிற அம்பேத்கர் நூலையும் நான் முழுதாக படிக்கவே இல்லை. அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மேல் என்னால் ஒரு முறை படிக்...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

படம்
புதுக்கோட்டையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் மக்கள் பதிப்பான பத்து நூல் கொண்ட தொகுதி அறிமுகம் அண்ணலின் பிறந்த நாளான 14.4.25 அன்று மாவட்ட தலைநகரில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு என் சி பி ஹெச் மண்டல மேலாளர் சுரேஷ் அவர்கள் தலைமை ஏற்க மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் நிகழ்ச்சி அறிமுகமும் செய்து வரவேற்பு அளித்தார்கள். நிகழ்ச்சி தொகுப்பு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் செய்ய, தொகுதிகளின் ஒவ்வொரு நூல் குறித்தும் எழுத்தாளர் பாலையா, தமுஎகச-வின் மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வம், அ.பெ.க.-வின் நிறுவனர் மரு. ஜெயராமன், அம்பிகா அறக்கட்டளை சந்திரா ரவீந்திரன், கஸ்தூரிரங்கன், முனைவர் சிவகவி காளிதாஸ், கவிஞர் பீர்முகமது, ஆகியோரும், சிறப்புரை கவிஞர் நா. முத்து நிலவன் த.மு.எ.க.ச. மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். கவிஞர் பெர்னாட்ஷா அவர்கள் கவிதையுடன் நன்றியுரைடன் நிறைவுற்றது. "தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுப்பு பழைய அவர்களின் நூல...

பாசிசம் ஒரு விவாதம்

படம்
இந்தியாவில் தற்போது அரசியல் பண்பாட்டுத் தளங்களில் மேலாதிக்கம் பெற்றுள்ள பாசிசம் எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் நுட்பமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பாசிசம் குறித்த அண்மைக்கால ஆய்வுகள் நமக்குப் பயன்படும். பாசிச அரசை நிறுவுவதில் கருத்தியல்சார் அரசு சாதனங்கள் (Ideological State Apparatuses) முதன்மையான பாத்திரத்தை வகிக்கின்றன. அவை அடக்குமுறைசார் அரசு गान (Repressive State Apparatuses) போலிஸ் , ராணுவம் முதலானவற்றிலிருந்து விலகிச் சுயேச்சையாகச் செயல்படுகின்றன. பாசிசத்தின் பிடியிலிருந்து அடக்குமுறைசார் அரசு சாதனங்களை விடுவித்தால் அது கருத்தியல்சார் அரசு சாதனங்களில் பதுங்கிக்கொண்டு மீண்டும் அடக்குமுறைசார் அரசு சாதனங்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அங்கே தனது பணியைத் தொடர்ந்து செய்யும். 1970களின் பின்பகுதியில் ஜனதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசாங்கத்தைக் கையாளும் ஆட்சி அதிகாரத்துக்குள் ஊடுருவிய பாசிஸ்டுகள், ஆட்சி அதிகாரம் போன பிறகு சிவில் சமூகம் எனப்படும் கல்வி, குடும்பம், ஊடகம், சமயம், அரசியல் கட்சிகள் முதலான கருத்தியல்சார்...

தாய்மொழி அடிப்படையிலான மருத்துவக் கல்வியின் பயன்கள்

படம்
  தாய்மொழி அடிப்படையிலான மருத்துவக் கல்வியின் பயன்கள் ஆசிரியர்: டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்  டாக்டர் ஏ.ஆர்.சாந்தி வெளியீடு :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., விலை :- 35,    பக்கம் 32 தமிழ்வழியில் மருத்துவக் கல்வி இல்லாதது, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் மிக, மிகப் பின்தங்கிய அடித்தட்டு சமூக மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது. தமிழ்வழி மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டால், இவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு கிட்டிடும். இதன் மூலம் சமூக நீதி காக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற ஏழை மாணாக்கர்கள், மருத்துவப் படிப்பை எளிதாகப் படிக்கவும். புரிந்துப் படிக்கவும் தமிழ்வழி மருத்துவக் கல்வி உதவும். ஆங்கில மோகத்தையும், ஆங்கில வழியில் படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையையும் தகர்க்கும் என்பதை விளக்கும் சிறு நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய ஒன்றிய அரசு ஒரே பண்பாடு ஒரே மொழி ஒரே தேர்தல் என்கின்ற முன்வைப்பின் இடையே பல மாநிலங்களின் மொழி அதிகாரம், இறையாண்மை போன்றவை  மாநில அதிகாரத்தின் மீது கு...

அண்டனூர் சுராவின் - வேங்குடி வயல் யூடியூப் காணொளி... லிங்

படம்
வேங்குடி வயல் - நூல் அறிமுகம்  👈🏾👈🏾👈🏾