இடுகைகள்

திருமணங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய திருமணங்கள் வரமா? சாபமா?

இந்திய திருமணங்கள் இன்றைய கால சூழலுக்கு பொருத்தமில்லாத போக்குகளை நிறைய தனக்குள் கொண்டுள்ளது. இங்கு ஆண் பெண் சமத்துவம் பேணப்படுவதில்லை அதற்கு பதிலாக மதம் சாதி கல்வி பணபலம் அந்தஸ்து குடும்பத்தினர்களின் விருப்பம் நிறம் ஜோதிட குறிப்பு என ஒவ்வொரு கட்டத்தை தாண்டி கடைசியாக திருமணம் நடைபெறும் இவ்வளவு கட்டங்களை தாண்டுவதற்கு பொருத்தம் இல்லாத நிறைய குறிப்புகளை மீண்டும் முழுங்கி விட்டு ஒரு மொக்கை துணையை நாம் கரம் பிடிக்க வேண்டி இருக்கும். சிலருக்கு வெற்றியடையலாம் பெரும்பாலும் புதிய ஏற்பாட்டுடைய நவீன உலகத்தில் சிக்கலாகவே நகர்கிறது. இளம் தலைமுறையினரின் கட்டுடைப்புகள் சமூகத்தை சங்கடங்களுக்குள் உள்ளாக்கி அது ஆணவக் கொலை வரை சென்று விடுகிறது. இந்திய அரசியல் சாசனம் தேர்ந்தெடுக்கும் உரிமையும் நிராகரிக்க உரிமையும் இணைந்தே வழங்கி இருக்கிறது ஆன போதும் இங்கு சாதி மேலும் மேலும் இருக்கமடைகிறது. இது புதிய வகை ஜனநாயகத்தை புரிந்து கொள்ளாமல் பழமையை மீண்டும் முழுங்கும் கசப்பு மருந்தாகவே இருக்கிறது.  சர்வதேச சமூகங்களில் பெண்ணே ஆணை தேர்ந்தெடுக்க முடியும். திருமணத்திற்கு முன்னர் ஒரு ஆண் பெண்ணிடம் மண்டியிட்டு காதலை ...