இடுகைகள்

அஞ்சலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மன்மோகனுக்கு அஞ்சலி. ஆனால்...

படம்
மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி. ஆனால் சிறந்த பொருளாதார நிபுணர் என்கின்ற வாசகத்தோடு அவரை உச்சி முகர்ந்து அஞ்சலி செலுத்துவது அதிகப்படியானது. முனைவர் மன்மோகன் சிங் முதலாளித்துவ பெரு நிறுவனங்களின் சிந்தனைகளை தனது திட்டங்களில் மெருகேற்றியவர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு மூன்றில் இரண்டு பங்கு வறுமை கோடு உள்ள நாடு, 60 சதவீத பெண் குழந்தைகள் இரத்த சோகைக்கு உட்பட்ட நாடு, உடனடியாக கார்ப்பரேட் வகை பொருளாதாரத்தை தூக்கி பிடிப்பது எவ்வளவு மிகப் பெரிய மோசத்தை உருவாக்கி இருக்கு.  மெது மெதுவாக வரையறுக்கப்பட்ட கலப்பு பொருளாதார மாற்றங்களை ஊக்குவிக்காமல், நேரடியாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி சுதந்திரமான சுரண்டல் ஏற்பாட்டுக்கு வழிவகை செய்து உள்ளூர் சிறு, குரு தொழில்களை சிதறடித்தவர். சரியாக கூறுவதென்றால் பாசிச பேரிடரை எழுதியவர். அவரின் ஆலோசகர்கள் அனைவரும் கார்ப்பரேட் பொருளாதார லாபியாளர்களே. மக்களை சந்திக்காமல் நியமனங்கள் எப்போதும் மேட்டுக்குடி தன்மைக்கொண்டதே. ... நிர்மலா சீதாராமன் வரை இதன் நிலை.  டாட்டா போன்ற உள்ளூர் முதலாளிகள் தங்கள் நிறுவனங்களில் பணி பாதுகாப்பு கல்வ...

ராஜ் கௌதமன் - அஞ்சலி

படம்
ராஜ் கௌதமனை பல கோனங்களில் பலரும் அணுகி இருந்தாலும், அவரின் மொழிபெயர்ப்பு கலை மிக உயர்வானது. அரிய வகை பண்பாட்டு நூல்களை தமிழுக்கு சமகாலத்தில் வழங்கிய பொறுப்பு மிக்க படைப்பாளி... அவரின் "அன்பு என்னும் கலை" நல்ல உதாரணம். புது தலைப்பாக இருக்கு என்று வாசிக்க துவங்கினேன். புலம் பெயர்ந்த யூத எழுத்தாளர் சோசலிச முகமைகள் சேர்ந்தவர் என்பதால் வாசிக்க துவங்கினேன். புதிய புரிதலும், அன்பு குறித்தான மறுமதிப்பிடை உருவாக்கியது. "...கலை பற்றிய கற்றறிதல் என்பது, ஒரு உச்சமான அக்கறையாக இருப்பதே அதன் நிபந்தனை..." "...அன்பெனும் கலையைப் பொறுத்தமட்டில், இக்கலையில் புலமையாளனாக வர ஒருவன் விரும்புகிறபோது, ஒழுங்கு, ஒருமுகப்படுத்துதல், பொறுமை ஆகிய பண்புகளைத் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காப்பாற்றும்..." "...குழந்தையிடம் தாய் கொண்ட பொறுப் புணர்வைச் சொல்லலாம். அவள், குழந்தை மீது மிகுந்த கவனமாக இருக்கிறாள்; அதன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களை மிக உன்னிப் பாகப் பார்க்கிறாள்; அவை வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்பே கவனிக்கின்றாள்; தன் குழந்தையின் அழுகுரல் கேட்...