நாடகப் பயிலரங்கு - பங்கேற்பு அனுபவம்
கடந்த வாரம் தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில குழு வழிகாட்டுதலின் அடிப்படையில், புதுக்கோட்டையில் இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கத்தை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக கடந்திருந்தோம். இந்த வாரமே கோயமுத்தூர் மாவட்ட கமிட்டியின் ஒருங்கிணைப்பில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள (தியாகசீலர் சி எஸ் சுப்பிரமணியம் நினைவு அரங்கம்) மாநில கட்சி கல்விக் கூடத்தில் இரண்டு நாள் நாடாக பயிலரங்கு நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட கட்சி கல்வி கட்டிடம் எல்லா வசதிகளும் நிறைந்த கல்விக்கூடம் என்பதை நேரில் கண்டபோது பெருமிதத்தை உணர முடிந்தது. இரண்டு நாள் பயிற்சி முகாம் முதன்மை ஆசிரியர் முனைவர் திலீப் குமார் ஒருங்கிணைப்பில் முதல் நாள் முற்பகல் நாள் உடற்பயிற்சியும், மதியம் 40 க்கும் அதிகமான பங்கேற்பாளர்களின் அறிமுகம், அவர்களிடையே இருக்கும் கூச்சங்களை போக்குதல், ஆண் பெண் சமத்துவத்தை உணரச் செய்தல் போன்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகள் நுட்பங்கள் மதிப்புமிக்க அழகு வாய்ந்தவை. கல்வி பள்ளிக்கூடத்துக்கு வெளியே தான் நிறைய கொட்டி கிடக்கிறது. உடற்பயிற்சிகள் அனைத்தும் நடிப்பதற்கான நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக அமைந்தி...