இடுகைகள்

அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாய்மொழி அடிப்படையிலான மருத்துவக் கல்வியின் பயன்கள்

படம்
  தாய்மொழி அடிப்படையிலான மருத்துவக் கல்வியின் பயன்கள் ஆசிரியர்: டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்  டாக்டர் ஏ.ஆர்.சாந்தி வெளியீடு :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., விலை :- 35,    பக்கம் 32 தமிழ்வழியில் மருத்துவக் கல்வி இல்லாதது, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் மிக, மிகப் பின்தங்கிய அடித்தட்டு சமூக மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளது. தமிழ்வழி மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டால், இவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு கிட்டிடும். இதன் மூலம் சமூக நீதி காக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற ஏழை மாணாக்கர்கள், மருத்துவப் படிப்பை எளிதாகப் படிக்கவும். புரிந்துப் படிக்கவும் தமிழ்வழி மருத்துவக் கல்வி உதவும். ஆங்கில மோகத்தையும், ஆங்கில வழியில் படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையையும் தகர்க்கும் என்பதை விளக்கும் சிறு நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய ஒன்றிய அரசு ஒரே பண்பாடு ஒரே மொழி ஒரே தேர்தல் என்கின்ற முன்வைப்பின் இடையே பல மாநிலங்களின் மொழி அதிகாரம், இறையாண்மை போன்றவை  மாநில அதிகாரத்தின் மீது கு...

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை சார்பில் மார்ச் 8 உலக மகளிர் தின நிகழ்வாக அன்னவாசல் கோகிலா பள்ளி வளாகத்தில் மரம் ராஜா அவர்களின் தூண்டுதலின் பெயரில் ஐந்து மரக்கன்றுகள் வழங்கிட மூன்று கன்றுகளை எழுத்தாளர் அறிமுகக் கவிஞர் செங்கை தீபா, நூல் விமர்சனம் செய்ய வந்த முனைவர் கனிமொழி செல்லத்துரை, விமர்சகர் ஆசிரியை பாண்டிச்செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் செம்மல் கவிஞர் தங்க மூர்த்தி, திருவரங்குளம் ஆரம்ப சுகாதார பணியாளர் பயிற்சி நிலைய தலைமை மருத்துவர் சுபாஷ் காந்தி ஆகியோர் மரக் குழந்தைகளை பூமி தாய் மடியில் மடிய அமர்த்தினர். பிற்பாடு மாவட்ட பொருளாளர் சோலச்சி அவர்களின் சிறய முயற்சியால் கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் முதல் நூலான பறக்கத் தயங்கும் பட்டாம்பூச்சி என்ற நூல் தமிழ்ச்செம்மல் தங்க மூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டு  மருத்துவர் சுபாஷ் காந்தியால் பெற்றுக் கொள்ளப்பட்டது மேற்கண்ட நிகழ்வில். வீதி இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கீ...

சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம் - நாவல் அறிமுகம்

படம்
சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம்  பாலஜோதி இராமச்சந்திரன் வகைமை ; புதினம்  சிறப்பு; இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பரிசு  வெளியீடு; நாற்கரம் ₹170 - பக்கம் 140 எளிய மனிதர்களை அன்றாடம் நாம் கடந்து போகிறோம் அவர்களின் அந்தந்த நேரத்து நியாயங்களை அதற்குப்பின் ஒளிந்திருக்க கூடிய எளிய சமூக உளவியல் போக்குகளை எதார்த்த மாகவும் அதன் தர்க நியங்களை உரையாடலாக நம்மிடையே கடத்தும் கதை.  கதையின் மையப் போக்கு எளிய உழைக்கு விளிம்பு நிலை மனிதர்களின் பழைய விழுமியங்களில் மீதான சமகால பொருளாதார அழுத்தங்கள் அவர்களை வேறொரு தளத்துக்கு மிக எளிதாக ஜனநாயகப்படுத்துவதும் அதை புரிந்து கொள்ளவும், அதன் வழி சக மனிதர்களின் அழகியலை பேசும் புதினம். எளிய மனிதர்களின் பின்தங்கிய பண்பாட்டுச் சூழலில், சூதற்ற அன்றாடம் உழைக்கும் மக்களின் கடைபிடிக்க முடியாத பழைய விழுமியங்களில் இருந்து நழுவும் உழைக்கும் மக்களின் உதிரி போக்குகளின் அங்கீகரிப்பை அவர்கள் வழி வாழ்வை பேசும் புதினமாக இருக்கிறது.  இந்த சமூகத்தின் பாதுகாப்பாக கருதப்படும் வீடு உறவு கல்வி ரேஷன் கார்டு ஆதார் கார்டு ...

வேங்குடிவயல் - அண்டனூர் சுரா - புதினம்

படம்
கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் கிராமத்தில் பெரும்பான்மை பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழ் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வாக இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் காவல்துறையின் விசாரணை என தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்று வரையில் அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் அரசு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சத்துமாவு கலந்தது என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து அரசும் அதிகாரவர்க்கும் இணைந்து இவ்வழக்கின் உண்மைகளை கொண்டு வருவதில் சுணக்கம் காட்டும் இந்த வேளையில், அதே மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் அண்டனூர் சுரா மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களை கொண்டு மீ புனைவாக வேங்கை வெயில் கிராமத்தின் பாகுபாடு அரசியலை பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். அதில் இடம்பெற்று இருக்கும் விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், மலைகள், நீர்நிலைகள், மரங்கள், மலர்கள், புற்கள் அப்பகுதி ஆட்சி செய்த மன்னர்கள் என கதை மாந்தர்கள் ஆக்கி அதனுடைய வாழ்வியல் ந...

கர்னாடக இசையின் கதை

படம்
கர்னாடக இசையின் கதை (A Southern Music) ஆசிரியர்: டி.எம். கிருஷ்ணா தமிழில்: அரவிந்தன் 2021 - ₹ 175 (விலையடக்க பதிப்பு) பக்கம் 278 - வெளியீடு: காலச்சுவடு  காலச்சுவடு - விலையடக்கப் பதிப்பாக வந்துள்ள வாய்ப்பாட்டுக் கலைஞர் டி எம் கிருஷ்ணாவின்  ஏ சர்தன் மியூசிக் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் தான் கர்நாடக இசையின் கதை.  ஏற்கனவே ஆசிரியரின் செபஸ்டியான் குடும்பக்கலை என்கின்ற மிருதங்க சிற்பிகளின் வரலாற்றை ஆய்வு நூலானது, மிருதங்கம் உருவாக்குபவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இடையான உறவு மக்களிடையே அவர்களுடைய வாழ்க்கை பாடுகளை திறம்பட நேரடி ஆய்வு செய்து கதை வடிவாக அதை பதிப்பித்து இருந்தார். ஒரு முன்னேறிய சமூக பிரிவை சார்ந்த பிரபலமான வாய்ப்பாட்டு கலைஞர், அறிவியல் நோக்கில் பறந்துபட்ட ஜனநாயக நோக்கில் ஆய்வு செய்து இசை எல்லோருக்குமானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எப்படி சுரண்டி அது கொலோச்சி இருக்கிறது என்பதை அடித்து நொறுக்கிய படைப்பு அது.  சமூகத்தின் நிலவும் சாதிய படிநிலை இசைக் கச்சேரிகளில் எப்படி வெளிப்படுகிறது. மிருதங்கம் உருவாக்குவதற்கு பின்னாடி எவ்வளவு உழைப்பு, எவ்வளவு நுட்பங்க...

கவிதையியல் - நூல் அறிமுகம்

படம்
கவிதையியல் -  வாசிப்பும் விமரிசனமும்  முனைவர் க . பூரணச்சந்திரன்  வெளியீடு:- அடையாளம் - 2013                 ISBN 978 81 7720 192 5   பக்கம்:- 144 விலை ₹120 "கவிதை என்பது ஒருவகை விளையாட்டு. அது மொழியின் வாயிலாகத் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. எந்த ஒரு விளையாட்டுக்கும் ஆட்ட விதிகள் உண்டு. கவிதை என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கான விதிகளைப்பற்றி அரிஸ்டாட்டில், தொல்காப்பியர் முதல் இன்றுவரை, ஏராளமான கோட்பாடுகளும் நடைமுறைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த விதிகளின் தொகுப்பில் இக்காலக் கவிதைகளுக்குத் தேவையான சில கருத்துகளையும் பழங்காலக் கவிதைகளை இரசிப்பதற்கும் ஆராய்வதற்குமான சில கருத்துகளையும் முன்வைக்கிறது இந்நூல். ஈராயிரம் கால நெடும்பரப்பில் கவிதையும் கவிதையியலும் என்னவாக இருந்தன; எப்படியெல்லாம மாறி வந்திருக்கின்றன என்பது பற்றி இந்த நூல் ஆராய்கிறது. கவிதையைப் பற்றி உலகளாவிய மரபார்ந்த சிந்தனையாளர்கள், நவீனவாதிகள், ருஷ்ய உருவவாதிகள், பிற சிந்தனையாளர்கள் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை எளிமையான சுவைமிக்க நடையில்...

நவீன கல்விக் கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன? ...

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய கல்வி குறித்து 2 பிப்ரவரி 1835 தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே அவர்களின் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில்:- சுந்தர் கணேசன் | ஆர். விஜயசங்கர் வெளியீடு :- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - சென்னை  பக்கம்:- 51 - ₹50 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இணையதளத்தில் இலவசமாக pdf வடிவில் கிடைக்கிறது. இந்திய கல்விமுறை குறித்து பருந்து பார்வையில் புரிதலும் அதனுடைய பரிமாணங்களை புரிந்து கொண்டு இந்திய சமூகத்தை மேம்படுத்து நோக்கி கல்வி படிநிலைப் பண்பாட்டு தேங்கிக் கிடந்தது எல்லோருக்குமாக மாற்றுவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் நுண்ணறிவும் சிறப்பாக அவருடைய இந்த அறிக்கை காட்டுகிறது. தமிழ் கூறும் நல் உலகம் ஆசிரியர் பெருமக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் படித்து வேண்டிய ஆவணம். அதை மொழிபெயர்த்து இணைய வழியில் இலவசமாக படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த வெளியீட்டாளர்களுக்கு நன்றியும் அன்பும். "தற்போது நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ஆங்கில மொழிக் கல்வியே பெரும் பங்காற்றியுள்ளது. அத்தகைய வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்துதலில் மெக்காலே அறிக்கைக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த அறிக...