தைல மரம் கூடாது... (AIPSO)
புதுக்கோட்டை மாவட்டத்தில் 58,000 ஏக்கர் காடுகள் இருந்ததாக பழைய புள்ளி விவரம். ஆனால் சற்றேக்குறைய 50 ஆயிரம் ஏக்கர் தைல மரக் காடுகளே உள்ளன. இதற்கு அரசு வைத்திருக்கும் பெயர் "சமூக வனக் கடுகள்" ஒரே வகை தாவரத்தை பயிர் செய்து விட்டு அதை சமூக நலக் காடுகள் என்பது எப்படி சரி ? இது புரியாத புதிர்தான். தைல மரத்தின் எந்த பகுதியும் மனிதனுக்கோ விலங்குகளுக்கோ பயன்படாது. பல்லுயிர் சூழலுக்கு எதிரானது. ஆனால் அரசுக்கு பராமரிப்பு குறைவு, சில குறிப்பிட்ட நபர்களுக்கு பல்வேறு வகையில் வருமானமாக அமைவதும், அரசின் சில துறைகளுக்கு ஊதியப் பலன்களுக்கு இதை நம்பி இருப்பதால் தொடர்ச்சியாக இதை செய்து வருகிறது. நாற்பது ஆண்டுகளாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், விவசாய சங்கங்கள் அறப்போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் நீதிமன்ற சட்ட போராட்டம் எனத் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். போராட்டக்காரர்கள் எந்த வகை குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாதிடுகிறார்களோ அதற்கு தகுந்தார் போல் லாவகமாக தப்பிக்கும் போக்கு அரசிடம் இருக்கிறது. அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் தனபதி ஒருங்கிணைப்பில் பல்வேறு தன்...