இடுகைகள்

கோணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி. நட்டம் அதிமுகவுக்கே...

படம்
"வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து, காண்டாமிருகம் பெயர் வைத்தாள்."  என்ற சொலவடை நாம் அறிந்த ஒன்றுதான். அதிமுக பாஜக கூட்டணியால் நட்டம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும் தான். எப்படி பார்த்தாலும் லாபம் பாஜகவுக்கு மட்டும். பாஜகவோடு யார் உறவு வைத்தாலும் அவர்களை கபாலிகரம் செய்து விடுவார்கள். இந்த முறை திமுகவையும் அதிமுகவை சேர்த்து சிதைத்து விடுவார்கள் என்கின்ற அச்சம் ஒரு ஓரத்தில் வரத்தான் செய்கிறது.  கடந்த 10 நாட்களாக செங்கோட்டையனை வைத்து எடப்பாடியை அசைத்து விட்டார் சந்தான பாரதி.. கண்துடைப்பு நாடகத்தில் அண்ணாமலை பலியாக்கி, அதிமுகவின் முன்னாள் நிர்வாகியை பொறுப்பாளராகி புதிய கோணத்தில் அடுரா ராமா என்று ஆட்டி வைக்கப் போகிறார் அதிமுகவை... மக்களிடம் அதிருப்தி ஆளுங்கட்சி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் என்ன செய்யப் போகிறது ? (நான் என்ன செய்வது?) சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 24 ஆவது தேசிய மாநாட்டை முடித்திருக்கிறது. அதனுடைய வரைவு அறிக்கையில் இன்றைய ஆளும் மத்திய அரசு பாசிச பண்பு கொண்டது அறுதி இட்டு சொல்லவில்லை என்று விமர்சனங்...

சாகித்திய அகடாமி விருது

படம்
வாழ்த்துக்கள் பெருந்தகையே. தஞ்சையில் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில், வ உ சி குறித்தான ஆய்வு நூலை ஆங்கிலத்தில் பெங்குவின் பதிப்பகம் வாயிலாக வெளியீடு செய்திருக்கும் வேங்கடசலபதி ஆய்வாளருக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்திரேப்பது. விருதுக்கும் மதிப்பு.  தஞ்சை இலக்கிய விழாக்கள் இரண்டு முக்கிய அடிப்படை போக்குகளை எப்போதும் என்னை வசிகரிப்பது உண்டு. 1. குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதும், பெரும்பாலும் பார்வையாளர்கள் வந்து அமர்ந்து விடுவது இயல்பாக நடந்துவிடும் 2. நூல்களை முன்பதிவு செய்து விலை கொடுத்து வாங்கும் பாங்கு.  நூல்களுக்கு அச்சுக் கூலி தான் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் அச்சு கூலியை கூட கொடுக்காமல், எழுத்தின் மதிப்பும் தெரியாம போகும் போக்கு பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. இலவசமாக வாங்கிச் செல்வதும் பிரிக்காமல் பறையில் உறங்குவதும் போக்கு நாம் அறிந்ததே. அது தஞ்சையில் புகழ்பெற்ற பழமையான பெசென்ட் அரங்கில் நடைபெற்றது. இதே அரங்கத்தில், வ உ சிதம்பரதனார் சுதேசி கப்பல் இயக்க பங்கு வெளியிட்டு நிதி திரட்டிய நிகழ...