இடுகைகள்

சூழலியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுக்குள் வர காலதாமதமாகும் காட்டுத்தீ

படம்
மேலும்... மேலும்...  சூழலியல் பிரச்சனையை  தள்ளிப் போடுவது, தட்டிக் கழிப்பது,  தவனை சொல்லுவதுமென...  நாடுகளின் அதிகாரம் மையங்கள் மெத்தனமாக இருக்கையில்... ஆலோசனை மட்டும் வழங்கும் ஐக்கிய நாட்டு சபையால் என்ன செய்து விட முடியும்... அமுல்படுத்த வேண்டிய நாடுகளின் அரசுகள் கார்ப்பரேட் கைக்கூலிகளாக, காதில் விழாதது போல கடந்து போவதும், ஒப்புக்கு மாரடித்து அழுதுவிட்டு வழக்கம்போல சீர்கேடுகளை தூக்கலாக செய்கிறார்கள். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய லாஸ்ஏஞ்சலஸ் இந்தப் பேரழிவு நிவாரணங்களை நம்மிடம் களவாண்டு தன்னை புணரமைத்துக் கொள்ளும் இந்தத் திரை மறைவு சுரண்டலை, எத்தனை பேர் நாம்மில் அறிந்திருப்போம்? என்னமோ போடா. புலம்பியே வாழ்நாள் கழிகிறது. அவர்கள் வாழ்ந்திட  நம் எல்லோரின் குழந்தைகளின் எதிர்காலத்தை தீக்கரையாற்றுகிறார்கள். அப்பாவி எளிய விளிம்பு நிலை மக்களும் சேர்ந்து சாக வேண்டி இருக்கிறது. (நன்றி:-பி.பி.சி. 👇🏾) கலிஃபோர்னியா உள்பட மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதி பல்லாண்டுக் காலமாக அனுபவித்த வறட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதனால், இது எளிதில் பாதிக்...

புவி பந்தை காத்தல் அவசியம்

படம்

மரம் இராஜா

படம்
மாத்தூர் ஊராட்சியில் - 480க்கும் குறையாத உள்ளூர் மரங்கள் நடும் விழா. மாத்தூர் ஊராட்சி, குளவாய்பட்டி அருகே ஊர் பொதுக் கண்மாயில் ஊராட்சித் தலைவரின் புதல்வர் சேகர் அவர்களின் மதிப்பு மிக்க முயர்ச்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 60க்கும் குறையாத உள்ளூர் மக்களைக் கொண்டு புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை இராஜா அவர்களின் சீரிய முயற்சியில் மரம் நடம் விழா (குறுங்காடு அமைக்கும் முயற்சி) சிறப்புற நடைபெற்றது.  மேற்கண்ட நிகழ்வில் கிலுவை மரப்போத்துகள் கொண்டு காடு அமையும் பகுதியைச் சுற்றி உயிர்வேலி அமைத்திருந்தது மதிப்பு மிக்க பணி. வேலி அமைத்து தண்ணீர் ஊற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்கினர். அருகே சன்னாசி கோவில் பழமை மாறாத கோவிலும், குடிநீர் குளமும் அருமை. பி-மாத்தூர் மதிய கரிகுழம்பு சுவையோடு இக்கூட்டு முயற்சியில் நானும் பங்கேற்றேன்.  கூட்டுறவே சூழலியல் சவால்களை சற்று தள்ளி வைக்கும்.  நிகழ்ச்சிக்கு அழைத்த மரம் இராஜா அவர்களுக்கு அன்பும் நன்றியும். இம்மழை பருவத்திற்குள் பொது இடங்களில் பாதுகாப்புடன் மரம் வளர்க்க ம...

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்

படம்
நூல் #சமகால_சுற்றுச்சூழல்_சவால்கள்  தொகுப்பாசிரியர்கள் : எஸ். விஜயன், த.வி. வெங்கடேஸ்வரன், ஆயிஷா நடராசன், செ.கா., ஸ்ரீகுமார், டயானா  வகை : கட்டுரை  பதிப்பகம்: புக்டே இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியீடு  பக்கம்;272 , விலை ₹400. கட்டுரை வகை சார்ந்த 28 சூழலில் கட்டுரைகளை தொகுத்தது புக்டே இணைய இதழ், பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டுள்ளன. சமகால சுற்றுச்சூழலில் பூமி மோசம் போய்விட்டது இனி திரும்பும் வாய்ப்பு இல்லை என்று பெரும்பாலானோர் சிந்தனை வகைப்பட்ட நிலையில் நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  சூழலில் சீர்கெடிலிருந்து பூமி பந்தை பாதுகாத்துக் கொள்ள இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை அளிக்கும் நூல். மனிதர்கள் அறிவியல் துணை கொண்டு இந்த பூமியின் பல்லுயிர் சூழலை பொறுப்புடன் அணுகும் போது சிக்கல்கலிருத்து மீளலாம் என்கின்ற அறிவியல் வகைப்பட்ட நம்பிக்கையை அளிக்கக்கூடிய 28 சூழலில் கட்டுரைகள். விஞ்ஞானிகள் துறை சார்ந்த அனுபவம் மிக்கவர்களால் எழுதப்பட்டுள்ளது. ஓசோன் ஓட்டையை எப்படி இந்த பூமி எதிர்கொண்டு வெற்றியடைந்தது என்ற சூழலியல் சவாலை தா.வி. வெங்கடேஸ்வரன் நிற...

காலநிலை மாற்ற தாக்கம் - ஒளிரும் வளர்மதி இதழில்

படம்

அமுத கலசம் இதழில் "மீட்புப் காலம்"...

படம்
மீட்புக்காலம்...?! சூழலியல் சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், துணுக்குகள், செய்திகள், தொலைக்காட்சிகளில் காணும் பேரிடர் போன்றவை சமுகத்தின் பொது புத்தி பயமுறுத்துவதாக உள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் இழந்து விட்டதாக மனித குலம் இனி பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று அலறுகின்றன. மனிதர்கள் உள்ளிட்ட உலகின் மொத்த உயிரினத் தொகுதியும் அற்றுப்போகும் என பதறுகின்றனர். மனிதகுலம் பழைய நிலைக்கு போக வேண்டும் என்ற கருத்தாக்கம் நொடிக்கு ஒரு முறை போதிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளே சுற்றுச்சூழலை கெடுக்கிறது என்கின்றனர். இப்படியான செய்திகள் தனிநபராகவோ, குறுங்குழுவாகவோ, கார்ப்பரேட் லாபியாகவோ மிகத் தீவிரமாக அரைகுறையாக, சமூக ஊடகங்கள் வழியாக வியாபிக்கிறது. இன்றை நாளில் சில அற்ப விஷயங்களை கூட பெரிதுபடுத்தி பார்ப்பது, பெரிய விஷயங்களை அற்ப விஷயங்களாக கருதி கொள்வது மலிந்து விட்டன. சிந்தனைத் தெளிவென்றி ஆழமாக உணர்ந்தறியாமல் நுனிப்புல் மேய்ந்தவாறு புரிந்தமாதிரி கடக்கிறோம். நம்மை சூழ்ந்து இருக்கக்கூடியதும், எல்லோருக்கும் பொதுவான, யாரும் உரிமை கொண்டா...

அமுத கலசம் இதழில் "சமூக துரோகம்"...

படம்
இன்றைய நவீன யுகத்தில் அறிவு என்பது பரவலானதும் எல்லோரின் கைகளிலும் உடனடியானதுமாக உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் 'கூகுள் பண்ணு' என்று நாம் வளர்ந்திருக்கிறோம். அதோடு whatsapp, X தளம் போன்ற சமூக வலைத்தளங்கள், யூடியூப், ரீல்ஸ் போன்ற காணொளி காட்சிகள் மூலமாக விரைவான செய்திகளை உடனுக்குடன் தகவல்கள் சரியாகவோ சரிக்கு நெருக்கமாகவோ நம்மை வந்தடைகின்றன. போதாக்குறைக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் போன்ற நுண்ணறிவு அல்காரிதம் நம்மை வழிநடத்துகிறது. இணைய வழியில் நாம் எதை அதிகமாக நுகர்கிறோமோ அதன் வழி நடத்தப்படுகிறோம், என்று சொன்னால் பொருத்தம் இருக்காது. இணையத்தின் மூலம் நம்மை வழிநடத்தி வருமானத்தை எய்துவதோடு, மூளைச் சலவை செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் அறிவு நிலையை பொறுத்து பல்வேறு பட்ட நுகர்வுகளுக்கு பல தரப்பாக சுவைபட வழங்குகின்றனர். எப்படி இந்தி தொலைக்காட்சி நாடகங்கள் தமிழ் டப் செய்யப்பட்டு நமது பண்பாடு, மொழியை சுரண்டுகிறதோ அதுபோல், வளர்ந்த பெரு நிறுவனங்கள் மனிதனை அறிதல் புரிதல் நிலையிலிருந்து விலக்கி நுகர்வை திணித்து வசியப்படுத்துக...