நூல் வெளியீடு & அறிமுகம்
2025 நவம்பர் 15 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட சார்பில் நூல் வெளியீடு மற்றும் அறிமுகம் நடைபெற்றது. நிகழ்வில் ராமலிங்கம் சேதுராமன் அடைக்கலம் சிவக்குமார் ஆகியோர் பாடலோடு நிகழ்வு செல்வி அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது. நிகழ்ச்சிக்கு புரவலர் கோ சாமிநாதன் அரங்கநாதன் நூலக நிறுவனர் தலைமை ஏற்க, மாநகர செயலாளர் அடைக்கலம் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, அன்னை சௌந்தரராஜன் அவர்களின் எல்லையில்லா வானம் என்ற நூலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் செங்கோடன் வெளியிட அதனை கவிஞர் கோ கலியமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் அண்டனூர் சுரா அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கவிஞர் அஜய் அவர்களின் மழையின் சாயல் நூலினை விமர்சகர் மூட்டம்பட்டி ராஜ் அவர்களும், கவிஞர் ரேவதி ராமின் நின்று கழிக்கும் வெயில் கவிதை நூலை கவிஞர் துவாரகா சாமிநாதன் அவர்களும், எழுத்தாளர் சிவானந்தம் அவர்களின் வழிபாட்டு விழாக்களில் தமிழர் மரபு என்ற கட்டுரை நூலை எழுத்தாளர் சோலைட்சி அவர்களும் அறிமுகம் செய்ய நூல் ஆசிரியர்கள் ஏற்புரை நள்ளினர் இந்நிகழ்வி...