ஆவுடையார் கோவில் - பயணம்
சைவர்கள் பௌத்தர்களை கழுவேற்றல் தேர் சிரமைப்பு 27 நட்சத்திர பொறிப்பு தியாகராஜர் மண்டபம் ஆவுடையார் கோவில் அடங்களுக்கு பிறத்தி அதாவது தெற்கு நோக்கிய சிவன் கோவில், கொடிமரம், பலிபீடம் கிடையாது, தெற்கில் குளம், பரியை நரியாக்கிய மாணிக்கவாசகரா உருவாக்கப்பட்ட தளம். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். நுழைவாயிலில் புலையன் புலத்தியர் உள்ளிட்ட சிற்பங்களும் சிறப்பான வடிவமைப்பு. சரஸ்வதி நூலகம் உண்டு, திருவாடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோவில். ஆவுடையார் கோவில் என்பது 'ஆவுடை' என்கின்ற பதத்திலிருந்து உருவானது. ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்து இருக்கும் நிலையே ஆவுடை. நமது மக்கள் கொச்சையாக "நக்கி ஆவடை" என்று பயன்படுத்தும் சொல்லிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம். சிவலிங்கத்தின் அடிப்படை இதுவென்றாலும் இன்று இந்தப் பெயர் கொச்சை என்பது போல் உணர்ந்து திருப்பெருந்துறை என வழக்கம்போல சமூகத்தின் மேல்தட்டு சாதிய...