இடுகைகள்

கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரை மறைவு லாபியே, உயர் பொறுப்பு

படம்
இந்திய பண்பாடு அவ்வளவு உயர்வானது ஒன்றும் இல்லை. வரலாறு நெடுகிலும் கயமை, துரோகம், பழிதீர்த்தல் போன்ற மோசடிகளையே உட்கிடக்கையாக கொண்டது . சமூக நீதிக்கு எதிரான படிநிலைப் பண்பாட்டை அரசியல் சாசன சட்டத்தின் மெதுவான வினையால் மாற்றங்கள் வரத் தொடங்க, இனி சுரண்டல்களை சமூக அநீதியை மூடி மறைக்க முடியாது முடியாது என்றபோது, தன்னை தக்க வைத்துக் கொள்ள பாசிசமாக பரிணமிக்கிறது. கடந்த காலத்தின் மருந்தாக இருந்த பண்பாட்டின் நல்விழிமியங்கள் இப்போது காட்சி பொருளாக, கடைப்பிடிக்க முடியாதவர்களால் போற்றி பாராட்டி விருது கொடுத்து தனிமைப்படுத்தும் தடித்தனமாக மாறி உள்ளது. குடும்பம் என்ற சிறிய அலகில் தொடங்கி சாதி, கோவில் நிர்வாகம், உள்ளூர் அதிகாரம், பெரு நிறுவனங்கள், கட்சி, அரசு பதவிகள், ஆளுங்கட்சி உயர்நிலை, இந்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பு வரை திரை மறைவு லாபிக்களால் தான் உச்ச அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. திரை மறைவு பண்பாடு சாதிகளில் ஆழமாகவும், முற்போக்கு அமைப்புகள், அதிகாரம் அற்ற அடையாள நிறுவனங்களில் குறைவாக இருக்கிறது. ஒரு போட்டியில் சமமான வாய்ப்புகள் உள்ள இருவரில் கூடுதல் திரை மறைவு வாய்...

போர் போர் அது நீண்ட அக்கப்போர்.

படம்
பயங்கரவாதத்தை துல்லிய தாக்குதல் மூலம் தீவிரவாதத்தை அதன் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தும் ராஜதந்திரத்திற்குள், வகுப்பு வாத வெறுப்பு வலிந்து திணிக்கப்பட்டு, சமூக முழுமைக்கும் பதட்டமான ஒரு பண்பாட்டை இந்த ராணுவ நடவடிக்கை உண்டு செய்துவிடும். ஊடகங்கள், அரசு, எதிர்க்கட்சி, நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்கள், வரியைப்பு செய்து பிரபலமாக உலா வரும் உயர் குடி சமூகம், போதாக்குறைக்கு செலிப்ரட்டிகள் என எல்லோரும் அரசுக்கு எதிராக கருத்து சொல்லாமல் ஆதரித்தே ஆக வேண்டிய நிர்பந்தம்.  போர் வரியை உயர்த்தும், உயிரிழப்பை ஏற்படுத்தும், உள்நாட்டு வளர்ச்சியில் முதலீடை குறைத்து குண்டுகளாக வெடித்து தள்ளும், உறுதியற்ற பொருளாதாரத்தால் உற்பத்தி குறையும், உணவு பற்றாக்குறை, பதட்டமான உள்ளூர் நெருக்கடிகளை உருவாக்கும், ஊரடங்கு, மின்தடை, போக்குவரத்து பாதிப்பு,  வேலை இழப்பு, கல்வி இழப்பு, தினந்தோறும் உயிரிழப்பு பட்டியல்கள் வந்து கொண்டே இருக்கும். சுற்றுலா போன்ற அந்நிய செலாவணி குறையும்.  போர் புலிவாலை பிடித்த கதை. வளரும் நாடு வேறொரு தந்திர உபாயத்துக்கு முயற்சிக்கலாம். பயங்கரவாதம் தீர்க்க வேண்டிய ஒன்று, பொ...

காரியக்கார கிறுக்குகளின் காலம்...

படம்
அமெரிக்காவின் அதிரடி அதிபர் வரி விதிப்புகளை மாத்தி மாத்தி அமைப்பது, தடாலடி அறிவிப்பை கொடுப்பது, பிறகு திரும்பப் பெறுவது என தொடர்ந்து கோமாளி போல நடந்து கொள்கிறார், என சர்வதேச ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை கேலிச்சித்திரங்களும் கிண்டலும் ஏகத்துக்கும் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கிறது. வர்த்தகப் போர் ஏற்படும் என்று முன்னணி பத்திரிகைகளும், தலையங்கம் எழுதி தள்ளுகிறது. பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் அதை உறுதி செய்வதாக எல்லோரும் நம்புகிறார்கள். பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்தும், அவர்களின் பொம்மலாட்டங்களே திட்டமிட்டு ஆட்டி வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகம் சரி செய்ய இன்றைய அமெரிக்க நிர்வாகம் முயல்கிறது. காரணம் மலிவான உழைப்பு கூலி, மூலப் பொருள்கள், வரிவிதம் குறைவு, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் குறைவு போன்ற காரணிகளால் அமெரிக்க முதலாளிகள் பிற நாடுகளில் முதலீடு செய்வது அதிகரித்து இருக்கிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறையில் பெரிய இடைவெளி ஏற்படுகிறது. இது வலுவாக இருக்கும் டாலரின் மதிப்பு குறைவதற்கான ஏற்பாடு செய்கிறது. எனவேதான் ஆப்கானிஸ்தான் ஈர...

சிந்து நதி மக்களுக்கானது, அரசுகளுக்கானதல்ல.

படம்
ப்ளே ஓவர் என்கின்ற உயர்மட்ட பாலங்கள், ரயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி இப்படி பல நல்ல அபிப்ராயங்கள் மனிதத் தவறுகளை அங்கீகரிக்க சிறுசிறு உப்புசப்பு இல்லாத கொண்டாட்டங்களோடு கலைந்து விடுவோம் அல்லது கலைத்துப் போகிறோம். பொது அறத்தை (கடவுளை) ஏமாற்ற மனிதர்கள் பாவனையாக தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அதே தப்பை அச்சு பிசகாமல் அழுத்தமாக செய்வது போல்... அரசுகள் தெரிந்தும் தெரியாதது போல் மக்களை தேசியவெறியால் எதிரியாக சித்தரிக்கிறார்கள். இதே நாட்டில் அன்றாடம் காட்சியாக அண்ணல் படும் விவசாயி போலவே அந்த நாட்டு மக்களும்.  நதி மக்களுக்கானது, உணவும் குடிமக்களுக்கானது, இதுநாள் வரை (பல நூற்றாண்டுகளாக) பரிணாமடைந்த பல்லுயிர் சூழலின் ஆதாரம் சிந்து நதி. 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்ததே. மதங்களால் தங்களுக்கிடையே நாடுகள் என்னும் பொய் கோடுகளால் சண்டையிட்டுக் கொண்டு,  அறியாத உழைக்கும் மக்களை ஏமாற்றி, ஆள்பவர்களும், அதிகார உயர்குடி செல்வந்தர்கள் உலகத்தை குட்டிச்சுவராக்குகிறார்கள்.  பலரும் மரம...

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி. நட்டம் அதிமுகவுக்கே...

படம்
"வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து, காண்டாமிருகம் பெயர் வைத்தாள்."  என்ற சொலவடை நாம் அறிந்த ஒன்றுதான். அதிமுக பாஜக கூட்டணியால் நட்டம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும் தான். எப்படி பார்த்தாலும் லாபம் பாஜகவுக்கு மட்டும். பாஜகவோடு யார் உறவு வைத்தாலும் அவர்களை கபாலிகரம் செய்து விடுவார்கள். இந்த முறை திமுகவையும் அதிமுகவை சேர்த்து சிதைத்து விடுவார்கள் என்கின்ற அச்சம் ஒரு ஓரத்தில் வரத்தான் செய்கிறது.  கடந்த 10 நாட்களாக செங்கோட்டையனை வைத்து எடப்பாடியை அசைத்து விட்டார் சந்தான பாரதி.. கண்துடைப்பு நாடகத்தில் அண்ணாமலை பலியாக்கி, அதிமுகவின் முன்னாள் நிர்வாகியை பொறுப்பாளராகி புதிய கோணத்தில் அடுரா ராமா என்று ஆட்டி வைக்கப் போகிறார் அதிமுகவை... மக்களிடம் அதிருப்தி ஆளுங்கட்சி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் என்ன செய்யப் போகிறது ? (நான் என்ன செய்வது?) சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 24 ஆவது தேசிய மாநாட்டை முடித்திருக்கிறது. அதனுடைய வரைவு அறிக்கையில் இன்றைய ஆளும் மத்திய அரசு பாசிச பண்பு கொண்டது அறுதி இட்டு சொல்லவில்லை என்று விமர்சனங்...

நாமக்கல் பண்பாடு...

படம்
திடீரென தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு ஆண்டு தேர்வு இறுதி நாளில் பள்ளி வளாகத்திற்கு பாதுகாப்பும் அளித்தது. ஏன் இந்த வேலை? என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், பள்ளி, கல்லூரி வகுப்பறையை விட்டு செல்லும் மாணவர்கள் கடைசி நாளில், வளாக சூழலை சூறையாடுகின்ற போக்கு  துவக்கத்தில் கொட்டடியாக செயல்பட்ட, நாமக்கல் போன்ற தனியார் பள்ளிகளில் இருந்து துவங்கியது எனலாம். இது தமிழகம் முழுவதுமான பொது கலாச்சாரமாக மாணவர்களிடம் மாறி உள்ளது. எவ்வாறு ஈவ்டீசிங் மிகப்பெரிய சீர்கேடுகளை உருவாக்கியதோ, அதேபோல பள்ளி வளாகத்தை சூறையாடி சேதப்படுத்தும் பண்பாடு மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது. முன்னர் எல்லாம் சீருடைகளை (பேனா மை தெளித்து விடுதல்) சேதப்படுத்தியதோடு முடிந்துவிடும். தனியார் பள்ளிகளின் கொட்டடிக் கல்வி முறை, அதிகப்படியான கட்டணங்கள் இவைகளில் வெறுப்புற்ற மாணவர்கள், கும்பல் மனோபாத்தோடு, அதுவரை படித்து வந்த பள்ளி வளாகத்தின் விட்டு வெளியேறும் கடைசி நாளில், அடக்கி வைத்த கோபத்தை இப்படியாக தீர்த்துக் கொள்கின்றனர். தனியார் பள்ளியில் படிக்கும் இருந்த இந்த பண்பாட்டு ஒவ்வாமை, இப்போது அரசு பள்ளியின் தொத்திக் கொண்டு வ...