மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி. ஆனால் சிறந்த பொருளாதார நிபுணர் என்கின்ற வாசகத்தோடு அவரை உச்சி முகர்ந்து அஞ்சலி செலுத்துவது அதிகப்படியானது. முனைவர் மன்மோகன் சிங் முதலாளித்துவ பெரு நிறுவனங்களின் சிந்தனைகளை தனது திட்டங்களில் மெருகேற்றியவர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு மூன்றில் இரண்டு பங்கு வறுமை கோடு உள்ள நாடு, 60 சதவீத பெண் குழந்தைகள் இரத்த சோகைக்கு உட்பட்ட நாடு, உடனடியாக கார்ப்பரேட் வகை பொருளாதாரத்தை தூக்கி பிடிப்பது எவ்வளவு மிகப் பெரிய மோசத்தை உருவாக்கி இருக்கு. மெது மெதுவாக வரையறுக்கப்பட்ட கலப்பு பொருளாதார மாற்றங்களை ஊக்குவிக்காமல், நேரடியாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி சுதந்திரமான சுரண்டல் ஏற்பாட்டுக்கு வழிவகை செய்து உள்ளூர் சிறு, குரு தொழில்களை சிதறடித்தவர். சரியாக கூறுவதென்றால் பாசிச பேரிடரை எழுதியவர். அவரின் ஆலோசகர்கள் அனைவரும் கார்ப்பரேட் பொருளாதார லாபியாளர்களே. மக்களை சந்திக்காமல் நியமனங்கள் எப்போதும் மேட்டுக்குடி தன்மைக்கொண்டதே. ... நிர்மலா சீதாராமன் வரை இதன் நிலை. டாட்டா போன்ற உள்ளூர் முதலாளிகள் தங்கள் நிறுவனங்களில் பணி பாதுகாப்பு கல்வ...