1 பிப்., 2025

வேங்கை வயல் - பொட்டி வந்துருச்சு...


வேங்கை வயல் கிராமத்தை ஒட்டிய எறையூர் சென்றோம் - தமிழ் பேராசிரியர் ஓய்வு முனைவர் கருப்பையா அவர்களும் நானும்...

சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று சாலையோரத்தில் கிடந்தது. இருவரும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் போது. 
"சிலையை நிமித்தி வைத்தால் ஊரில் எல்லோருக்கும் பேதி வந்து விடுகிறது என்கிறார்கள்..." என்றார்.

இப்போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது எறையயூரா? அல்லது இறையூரா? 

சிதிலமான சிவன் கோயில் ஒன்று இரண்டு ஏக்கருக்கும் குறையாத நிலத்தில் ஆங்காங்கே அவருடைய கட்டுமானங்கள் சிதிலமாக ஒரு துவாரபாலகரும் தேமே என்று கீழே கிடக்கிறது.

வேங்கை வயல் தீர்ப்பு வந்துவிட்டது. அண்டனூர் சுராவின் வேங்குடிவயல் புனைவு உண்மையாகிறது.

கருப்பாயி காத்தவராயன் காத்தாயி இப்படி உள்ளூர் தெய்வங்கள் கேட்பாரற்று கிடக்க, அதை வணங்கி பெயர் பெருமிதமாக வைத்துக் கொண்டு உள்ளனர். உள்ளூர் எளிய மக்களின் பெயர்கள் கூட இன்று கேளிப் அதே மதத்தை சார்ந்தவர்களால் கேளிக்கை சொல்லாடல்களோடு பிளவு பட்ட படிநிலைப் பண்பாட்டில் தனக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் சமூகம் மக்களின் முன்னோடியான்கள் கேலிப் பொருளாக... 

என் வீட்டு மரணம் எனக்கு தெய்வம், அடுத்த வீட்டு மரணம் பிசாசு என்பது போல பிற சமூகத்தின் முன்னோடி தெய்வங்கள் வெறும் பொம்மையாகவே காட்சியளித்தது.

யாருக்கோ இறையாகிய அவ்வூர் கால வெள்ளத்தில் இன்றைய பொருத்தப்பாடுடையாதாக எறையூர் என்றே அரசு பதிவேடுகளிலும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: