தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஜேஜே கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி புதுக்கோட்டை தமிழ்த்துறை இணைந்து மாணவர்களுக்கு இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கு. 14.15 ஜூலை 2025 கல்லூரி வளாகத்தில் மூன்று ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் துவங்கியது. துணைத் தலைவர் ஐயா தயாநிதி மற்றும் எழுத்தாளர் முனைவர் துவாரகா சாமிநாதன் இருவரின் சீரிய முயற்சியில் இந்நிகழ்வு சாத்தியப்பட்டது. தமிழ் தறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். கல்லூரி முதல்வர் அவர்களின் துவக்க உரையுடன் ஐந்து அமர்வுகள் சிறுகதை குறித்த அழகியல் இன அறிவியல் கூறுகள் என பல்வேறு பொருன்மைகளில் முனைவர் காமராசு துவங்கி வைத்து, கவிஞர் கண்மணி ராசா சிறுகதை பேசுபொருள் குறித்தும், அண்டனூர் சுரா அவர்களின் வட்டார எழுத்தாளர்களின் கதையாடலும் சிறுகதையின் பெண்கள் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அழகிகளும் இன வரைவியிலும் என்கின்ற பொறுமை குறித்து கவிஞர் கலியமூர்த்தி அவர்களும் நுட்பமான உரையால் மாணவர்களை பேராசிரியர்களை ஈர்ப்புடன் ஒருங்கிணைத்தனர். நிறைவுறையாக மாநில பொதுச் செயலாளர் கல்லூரி நிர்வாக...
நேற்றைய 'வீதி' 133 மாதாந்திர நிகழ்வு தோழர் மணிமேகலை அவர்கள் தலைமையில் அய்யா திருப்பதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து பரிசளிப்புடன் துவங்கியது. நிகழ்வில் புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனத் தலைவர் கவிஞர் எஸ் இளங்கோ அவர்களின் 10 நிமிடத்திற்கு உள்ளான இரண்டு ஆவணப் படங்கள் 3 குறும்படங்கள் திரையிடல் படத்தேர்வு அருமை. சக மனிதர்களின் உணர்வுகளை குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் கடப்பாடுகளை கடத்தும் திரைக்களமாக தேர்வு செய்தது அருமை. தேர்ந்தெடுத்த படங்களை கூட்டமாக ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அலாதியான கதையாடல் தான். யூடியூப் ரில்ஸ்கள் எவ்வளவு வந்தாலும் எல்லோரும் அமர்ந்து கூட்டமாக திரைக்கதைகளை ரசிப்பது அது பார்வையாளர்களுக்கு கடத்தும் ரசனைகள் ஏராளம் தாராளம் குறையாத ரகமே. தோழருக்கு நன்றி பிறகு 'கொடைவள்ளல்' குறும்படத்தில் நடித்த சிறுவன் நாயகனுக்கு பாராட்டும் தொடர்ந்து இது போன்ற கலை ஆர்வங்களை இலக்கியத் தளங்களில் விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி தாளாளரும் தமிழ் சங்க தலைவரும் தங்க மூர்த்தி அவர்களின் பங்கேற்பு நன்றிக்குறியது...
சைவர்கள் பௌத்தர்களை கழுவேற்றல் தேர் சிரமைப்பு 27 நட்சத்திர பொறிப்பு தியாகராஜர் மண்டபம் ஆவுடையார் கோவில் அடங்களுக்கு பிறத்தி அதாவது தெற்கு நோக்கிய சிவன் கோவில், கொடிமரம், பலிபீடம் கிடையாது, தெற்கில் குளம், பரியை நரியாக்கிய மாணிக்கவாசகரா உருவாக்கப்பட்ட தளம். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். நுழைவாயிலில் புலையன் புலத்தியர் உள்ளிட்ட சிற்பங்களும் சிறப்பான வடிவமைப்பு. சரஸ்வதி நூலகம் உண்டு, திருவாடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோவில். ஆவுடையார் கோவில் என்பது 'ஆவுடை' என்கின்ற பதத்திலிருந்து உருவானது. ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்து இருக்கும் நிலையே ஆவுடை. நமது மக்கள் கொச்சையாக "நக்கி ஆவடை" என்று பயன்படுத்தும் சொல்லிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம். சிவலிங்கத்தின் அடிப்படை இதுவென்றாலும் இன்று இந்தப் பெயர் கொச்சை என்பது போல் உணர்ந்து திருப்பெருந்துறை என வழக்கம்போல சமூகத்தின் மேல்தட்டு சாதிய...
கருத்துகள்