கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட குழு
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட குழு கூட்டம் (17.5.25) புதுக்கோட்டை திலகர் திடலில் மாநில குழு உறுப்பினர் தோழர் கோவில் குணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குழுவில் மாநில குழு உறுப்பினர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை தலைவர் செயலாளர் இணைப்பு செய்யப்பட்டனர்.
முனைவர் ஆர். மணிமோகன் மாநில செயற்குழு உறுப்பினர் மாநில முடிவுகளை முன் வைத்து, ஜூன் 14 15 ஆகிய இரு தினங்கள் புதுக்கோட்டை சிப்காட்டுக்கு அருகிலுள்ள அம்பிகா அறக்கட்டளையில் நடத்தும் முடிவை அறிவித்தார்கள்.
தோழர் செம்பை மணவாளன் பெயரில் சிறுகதை போட்டி ஒன்றை அறிவிப்பு செய்வது, குறும்படம் திரையிடல், முன்னோடிகளை கௌரவம் செய்யும் நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டது. மேற்கண்ட நிகழ்வில் செயலாளர் பாலச்சந்திரன், தலைவர் அண்டனூர் சுரா, பொருளாளர் சோலச்சி, மாநில குழு உறுப்பினர் சிவானந்தம், அஜய்குமார் கோஷ், துரைமாணிக்கம், தமிழ்மாறன், சிவக்குமார், பவுல்ரஜ், அடைக்கலம், முட்டாம்பட்டி ராஜ், சாக்கிய பிரபு ஆகியோர் பங்கு பெற்றனர்.
கருத்துகள்