இடுகைகள்

கவிதை

படம்

உம்பரான் சிறுகதை நூல் வெளியிடு

படம்

கவிதை

படம்

போர் எதிர்ப்பு - AIPSO

படம்
நான் ஒன்றும் அப்பாடக்கர் இல்லை...  "டம்மி பீசு தான்" எங்க வீட்டுக்கு வந்த விருந்தினரை பாதுகாக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது என் பண்பாடு அல்ல ஆனாலும் கையறு நிலையிலையே, ஏனெனில் என் தகுதிக்கு மீறி பல பொய்கள் சொல்லி என் குடும்பத்தின் அதிகாரத்தை கைப்பற்றினாலும் எதார்த்தம் உள்ளீடாக இருக்கிறது.  30 நாட்களுக்கு அடுத்த வீட்டில் உப்பு வாங்க செல்ல ரோட்டிடம் அனுமதி இருந்தால்தான் இல்லையென்றால் சொரணைக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில்... என் ராஜதந்திரங்கள் இப்போது பல்ல்லிக்கிறது. வீட்டு அதிகாரம் பெறுவதெல்லாம் பொய் என்பது புரிந்து விட்டது. அன்பின் வழி அறம் உலகை ஆளுமை செய்யும் என்று நினைத்தேன். இல்லை நண்பர்களே பக்கத்து வீட்டு பட்டாகத்திக்கு பயப்படுகிறேன்.  எனக்கு மட்டுமல்ல, எனக்குப் பின் யார் இந்த அதிகாரத்துக்கு வந்தாலும் இதுதான் நிலை. அன்பு செய்தது போதும். ஆயுதம் செய்யனும் பட்டினி கிடந்தாவது. வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் நடிப்பது...  விஸ்வ குரு கட்டியமைத்த வல்லரசு கற்பிதம், புனைவு என்று புரிந்த நாள் இன்று. 147 கோடி மக்கள் தொகையுடன் பெரிய பலம் வாய்ந்த இராணுவ என்...

முத்துக்குடா -புதுக்கோட்டையின் அலையாத்தி காடு

படம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடற்கரை நகரமான முத்துக்குடா அலையாத்தி காடுகள் சுற்றுலா செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் இணைந்து மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது படகு கட்டணம் தான் கூட ஆனால் நல்ல அனுபவம். எதிர்காலத்துக்கான மேம்படுத்தும் பணி அலையாத்தி காடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் வகையில் பிச்சாவரம் போன்ற ஏற்பாடுகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எவ்வாறு இருந்தபோதும் எதிர்காலத்தில் அலையாத்தி காடுகளின் நல்ல அனுபவத்தை பெறலாம். அதற்கான இயற்கை சூழல் சிறப்பாக இருக்கிறது. பறவைகளை அதிகம் காண முடிந்தது. படகு ஓட்டுநர் சிறந்த தகவல்களை நமக்கு வழங்கினார். இது ஒரு மட்டும் சென்றதால் பிறரோடு பகிர்ந்து கொண்டோம் படகு பயணக் கட்டணத்தை 20 நிமிட பயணம் கட்டணம் ஒரு படகில் 8 இருக்கைகள் ₹900. நவம்பர்- பிப்ரவரி மாதங்களில் பறவைகளை காணலாம். இது மீமிசலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில். மீமிசலில் கடற்கரை (mini beach) இருக்கிறது. காலை வேளையில் நேரடியாக மீன்கள் கொள்முதல் செய்யலாம். சேற்று இறால் என்று சொல்லக்கூடிய இறால் மீன் ரகம் அதிகாலையில் நெஞ்சளவு தண்ண...

தோழர் சந்துரு படத்திறப்பு & செம்பை மணவாளன் நினைவு சிறுகதை போட்டி பரிசளிப்பு

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் செம்பை நினைவாக சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டு முதலாம் ஆண்டு சிறப்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு என்ற ஆர் சந்திரசேகரன் அவர்களின் படத்திறப்பு புகழஞ்சலி நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வையும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்ட குழு ஏற்பாட்டில் 15 பிப்ரவரி புதுக்கோட்டையில் நடந்தது. செப்டம்பர் 22 ஆம் தேதி போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி முடிவுகளும், பிப்ரவரி 15ஆம் தேதி பரிசளிப்பு நடைபெற்றது.  121 கதைகள் ஆஸ்திரேலியா இலங்கை பம்பாய் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகமெங்கும் பரவலாக கதைகள் வந்து சேர்ந்தன. முதல் இரண்டாம் மூன்றாம் இடம் மற்றும் சிறப்பு பரிசுகள் மூன்று என ஆறு பரிசுகள் வழங்கப்பட்டன. விருத்தாளர்களுக்கு நினைவுப் பரிசு, பரிசுத் தொகை பயனடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கதைகள் குறித்து பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் அறம் கதைகள் குறித்து சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் கவிச்சுடர் இராசு. கவிதைபித்தன் அவர்கள் பொதுவுடமை தோழர்க...