இடுகைகள்

கொத்தி தின்னும் நினைவுகள் - மாநில கவிதை முகாம் , இராசபாளையம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாட்டில் ராஜபாளையத்தில் அய்யனார் அருவி அருகே சிவானந்த ஆசிரமத்தில் இரண்டு நாள் மாநில கவிதை முகாம் நடைபெற்றது. இதில் கவிஞர் சிற்பி 90, எழுத்தாளர் வண்ணதாசன் 80 ஆகியோருக்கு பாராட்டும் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு வீரபாண்டியன் வாழ்த்துரையுடன் தொடங்கியது. மாநிலத் தலைவர் கங்கா அவர்கள் தலைமையில், சிருங்கை சேதுபதி அவர்கள் சிற்பி குறித்தும், கண்மணி ராசா அவர்கள் வண்ணதாசன் குறித்தும் புகழுரை வழங்கினர்.  இந்நிகழ்வில் எனது நான்காவது கவிதை தொகுப்பான கொத்தி தின்னும் நினைவுகள் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு கலை இலக்கியப் பெரும் மன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் அறம் தலைவர் தோழர் கங்கா மற்றும் அனந்தகுமார் அகிலா கிருஷ்ணமூர்த்தி யவனிகா ஸ்ரீ ராம் தோழர் கண்மணி ராசா ஆகியோர் முன்னிலையில் வெளியீடு செய்யப்பட்டது. இதில் தோழர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடலும் வெளியீடு செய்யப்பட்டது.  பிறகு கவிதை குறித்தான பல்வேறு பொருமைகள...

கொத்து தின்னும் நினைவுகள் - கவிதை தொகுப்பு வெளியீடு

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாட்டில் ராஜபாளையத்தில் அய்யனார் அருவி அருகே சிவானந்த ஆசிரமத்தில் இரண்டு நாள் மாநில கவிதை முகாம் நடைபெற்றது. இதில் கவிஞர் சிற்பி 90 எழுத்தாளர் வண்ணதாசன் 80 ஆகியோருக்கு பாராட்டும் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு வீரபாண்டியன் வாழ்த்துரையுடன் தொடங்கியது. மாநிலத் தலைவர் கங்கா அவர்கள் தலைமையில், சிருங்கை சேதுபதி அவர்கள் சிற்பி குறித்தும், கண்மணி ராசா அவர்கள் வண்ணதாசன் குறித்தும் புகழுரை வழங்கினர்.  இந்நிகழ்வில் எனது நான்காவது கவிதை தொகுப்பான கொத்தி தின்னும் நினைவுகள் எழுத்தாளர் கண்ணதாசன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு கலையலைக்குப் பெரும் என்ற பொதுச் செயலாளர் தோழர் அறம் தலைவர் தோழர் கங்கா மற்றும் அனந்தகுமார் அகிலா கிருஷ்ணமூர்த்தி யவனிகா ஸ்ரீ ராம் தோழர் கண்மணி ராசா ஆகியோர் முன்னிலையில் வெளியீடு செய்யப்பட்டது. இதில் தோழர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடலும் வெளியீடு செய்யப்பட்டது.  பிறகு கவிதை குறித்தான பல்வேறு பொருமைகளில் நெறிய...

மாநில கவிதை முகாம் - எனது செய்நேர்த்தியில் பதாகைகள் & நான்காவது கவிதை நூல் வெளியீடு

படம்

சென்னை பயணம்

படம்
1. ஒரேநாளில் சென்னை போய் திரும்பியது 19 மணி நேரத்திற்குள்  2. ஒரு மணிநேரத்திற்குள் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றதும், முடிவெடுத்ததும் சிறந்த அனுபவம். உயர் மட்ட குழு புரிதலும் பொறுப்புணர்வு மேன்மையே காரணி நம்பிக்கையளிக்கும் முடிவுகள். 3. சென்னையில் முதல் மெட்ரோ ரயில் பயணம். விரைவு - பாதுகாப்பு - அறிவிப்புகள் தரமான நிர்வாகம் (₹ கூட) 4. நனைத்தவாறே நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாசாலை வேடிக்கை பார்த்தது (செம்மொழி பூங்கா மிஸ்ஸிங்) கூட்ட ஏற்பாட்டாளர்கள்  அறை ஒதுக்கிட ஓய்வு, பழைய நண்பர்கள் சந்திப்பு என கச்சிதமான சென்னை பயணம். 

பீகார் தேர்தல் - நம்பிக்கையான பின்புல புரிதல்

படம்
பீகார் தேர்தல் ஒரு கழுகு பார்வை அம்மாநிலத்தின் சமூக பொருளாதார வரலாற்று பின்புலத்தின் ஊடே புரிந்து கொள்ள வேண்டி இரக்கிறது. மகா கூட்டணியின் தோல்வி வலதுசாரி அரசியல் எதிர்பார்ப்பாளர்களை மனசு சோர்வுர செய்திருக்கு. இதை நான் நம்பிக்கையின் வெளிச்சமாக உணருகிறேன். முதலில் மோடி ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக  வாக்களிக்கவில்லை. மகா கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. ஏன் ராகுல் காந்திக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் ?  நமது சிந்தனையில் பீகார் குறித்து பல்வேறு கதையாடல்கள் ஊறி மொதுமொத்து இருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாநிலம் வெளிமாநிலங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு இடம்பெயர் இருக்கிறார்கள். கற்றல் குறைவு, பழைய பண்பாட்டு விழுமியங்களை குறிப்பாக சாதி படிநலைகள் இருக்கும் நிறைந்ததாக உள்ளது என பல பின் வாங்கிய நிலைகளை நாம் அறிகிறோம். அது உண்மையும் கூட.  தமிழகம் போன்று ஒரு கிராமத்தில் 500 பேர்களில் 450 பேர் நிலங்களை கொண்ட கிராமங்கள் அவை கிடையாது. 50 பேரிடம் மட்டுமே நிலம் இருக்கும். அப்படி என்றால் அதன் அதிகாரம் சலுகைகள் நீதி காவல்துறை பல்வேறு நிறுவன அமைப்புகளில் பொறுப்ப...

நூல் வெளியீடு & அறிமுகம்

படம்
2025 நவம்பர் 15 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட சார்பில் நூல் வெளியீடு மற்றும் அறிமுகம் நடைபெற்றது. நிகழ்வில் ராமலிங்கம் சேதுராமன் அடைக்கலம் சிவக்குமார் ஆகியோர் பாடலோடு நிகழ்வு செல்வி அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது.  நிகழ்ச்சிக்கு புரவலர் கோ சாமிநாதன் அரங்கநாதன் நூலக நிறுவனர் தலைமை ஏற்க, மாநகர செயலாளர் அடைக்கலம் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, அன்னை சௌந்தரராஜன் அவர்களின் எல்லையில்லா வானம் என்ற நூலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் செங்கோடன் வெளியிட அதனை கவிஞர் கோ கலியமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் அண்டனூர் சுரா அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கவிஞர் அஜய் அவர்களின் மழையின் சாயல் நூலினை விமர்சகர் மூட்டம்பட்டி ராஜ் அவர்களும், கவிஞர் ரேவதி ராமின் நின்று கழிக்கும் வெயில் கவிதை நூலை கவிஞர் துவாரகா சாமிநாதன் அவர்களும், எழுத்தாளர் சிவானந்தம் அவர்களின் வழிபாட்டு விழாக்களில் தமிழர் மரபு என்ற கட்டுரை நூலை எழுத்தாளர் சோலைட்சி அவர்களும் அறிமுகம் செய்ய நூல் ஆசிரியர்கள் ஏற்புரை நள்ளினர் இந்நிகழ்வி...