இடுகைகள்

வேங்குடிவயல் - அண்டனூர் சுரா - புதினம்

படம்
கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் கிராமத்தில் பெரும்பான்மை பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழ் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வாக இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் காவல்துறையின் விசாரணை என தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்று வரையில் அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் அரசு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சத்துமாவு கலந்தது என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து அரசும் அதிகாரவர்க்கும் இணைந்து இவ்வழக்கின் உண்மைகளை கொண்டு வருவதில் சுணக்கம் காட்டும் இந்த வேளையில், அதே மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் அண்டனூர் சுரா மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களை கொண்டு மீ புனைவாக வேங்கை வெயில் கிராமத்தின் பாகுபாடு அரசியலை பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். அதில் இடம்பெற்று இருக்கும் விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், மலைகள், நீர்நிலைகள், மரங்கள், மலர்கள், புற்கள் அப்பகுதி ஆட்சி செய்த மன்னர்கள் என கதை மாந்தர்கள் ஆக்கி அதனுடைய வாழ்வியல் ந...

புதுகை பண்பலையில் - பொங்கல் குறித்து நான்

படம்
புதுகை FM-ல் பேட்டி  👈🏾👈🏾

கட்டுக்குள் வர காலதாமதமாகும் காட்டுத்தீ

படம்
மேலும்... மேலும்...  சூழலியல் பிரச்சனையை  தள்ளிப் போடுவது, தட்டிக் கழிப்பது,  தவனை சொல்லுவதுமென...  நாடுகளின் அதிகாரம் மையங்கள் மெத்தனமாக இருக்கையில்... ஆலோசனை மட்டும் வழங்கும் ஐக்கிய நாட்டு சபையால் என்ன செய்து விட முடியும்... அமுல்படுத்த வேண்டிய நாடுகளின் அரசுகள் கார்ப்பரேட் கைக்கூலிகளாக, காதில் விழாதது போல கடந்து போவதும், ஒப்புக்கு மாரடித்து அழுதுவிட்டு வழக்கம்போல சீர்கேடுகளை தூக்கலாக செய்கிறார்கள். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய லாஸ்ஏஞ்சலஸ் இந்தப் பேரழிவு நிவாரணங்களை நம்மிடம் களவாண்டு தன்னை புணரமைத்துக் கொள்ளும் இந்தத் திரை மறைவு சுரண்டலை, எத்தனை பேர் நாம்மில் அறிந்திருப்போம்? என்னமோ போடா. புலம்பியே வாழ்நாள் கழிகிறது. அவர்கள் வாழ்ந்திட  நம் எல்லோரின் குழந்தைகளின் எதிர்காலத்தை தீக்கரையாற்றுகிறார்கள். அப்பாவி எளிய விளிம்பு நிலை மக்களும் சேர்ந்து சாக வேண்டி இருக்கிறது. (நன்றி:-பி.பி.சி. 👇🏾) கலிஃபோர்னியா உள்பட மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதி பல்லாண்டுக் காலமாக அனுபவித்த வறட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதனால், இது எளிதில் பாதிக்...

"என்ன என்ன சொல்றான் பாருங்க..."

படம்
முகநூல் - இன்ஸ்டாகிராம் - whatsapp இதனுடைய தலைமை நிர்வாகமான மெட்டா உலகெங்கிலும் அதிக சமூக வலைதள கணக்குகளை கையாள்வதும் வருமானம் ஈட்டுவதும் எல்லோரும் அறிந்ததே. கடந்த முறை அரசுக்கு எதிரான செய்திகளை இருட்டடிப்பு செய்வதும், தனக்கு வேண்டியவர்களிடம் திரை மறைவாக பெருந் தொகையை பெற்றுக் கொண்டு ஆதரவான கருத்துக்களை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் தேர்தலிலே முடிவுகளுக்குப் பிறகு விவாதிக்கப்பட்டு நீதிமன்றம் தலையீடு செய்து கூகுள், facebook உள்ளிட்ட இன் பிற நிறுவன தலைமை அதிகாரிகளிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது தண்டத்தொகை விதித்ததும் எல்லோரும் அறிந்ததே. எல்லா நாடுகளிலும் அந்தந்த நாடுகளுடைய ஆளுங்கட்சி சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு மிகப்பெரிய லாபத்தை ஈட்டு வரும் இந்த சமூக வலைதள நிறுவனங்கள், இப்போது இழப்புகளை சந்திக்கிறது. அரசுக்கு ஆதரவான செய்தி மட்டும் வரும்படியான அல்காரித மென்பொருள்கள் எதிர் குரலை ஒடுக்குவதும் அதிகார வர்க்கத்திற்கு சாமரம் வீசுவதும் இருந்தன. இந்த போக்குகள் வரலாற்று நெடிகளும் நாம் கண்ட ஒன்றுதான்.  இப்போது டிஜிட்டல் உலகமும் ஐந்தாம் படைவேளையை நுட்பமாக நாகரிகமாக நடத்து...

மரண தண்டனை தீர்வா ?

படம்
சமூக நீதியை உள் கிடக்கையாக கொண்ட திராவிட மாடல், வளர்ந்து வரும் ஜனநாயக அரசுகள் மருதலிக்கும் மரண தண்டன மூலம் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழைய நிலபிரமபுத்துவ பழிவாங்கும் மரபார்ந்த மரண தண்டனையை ஊக்குவிப்பது சரியல்ல.  முதல் உலகப்போர் இரண்டாம் உலகப் போர்களுக்கு பிறகு (உலகம் மன்னர் ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும்+மன்னர் ஆட்சிக்கும் சோசலிசத்துக்கும் போட்டியாக போர்கள்) அடுத்தடுத்த இலக்குகள் நோக்கி அரசுகளையும், மக்களையும் கொண்டு சேர்த்திருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் பெரும்பாலான நாடுகள் மன்னராட்சி இருந்தால் கூட ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தும் சட்ட வடிவங்களை அங்கீகரித்து உள்ளன. ஆனால் சமூக நீதிப் பேசக்கூடிய திராவிடல் மாடல் அரசு தனி மனிதர்கள் தங்கள் நினைத்ததும் ஆங்காரமான செய்யக்கூடிய மரண தண்டனையை ஊக்குவிக்கிறது. வீழப்போகும் அரசு தன்னை தற்காத்துக் கொள்ள, மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை சலுகைகளை சட்டங்களை கொண்டு வருவது இயல்பு. அனைய போற விளக்கு பிரகாசமாக எரியு ம் என்பது போல. அப்படித்தான் கடந்த காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்ப...

கவிதை

படம்

கூத்தானிக் கருப்பர் - இளஞ்சாவூர் திருமயம்

படம்
திருமயத்தில் இருந்து கடியாபட்டி போகும் சாலையில் இடையில் இருக்கிறது இளஞ்சாவூர். ஊரில் சாலை தெற்கு பக்கத்தில் இருக்கிறது இந்த கோவில்காடு. புதுக்கோட்டையில் கோவில் காடுகள் அதிகம். இக் காடுகளில் பழைய மர வகைகள் அதிகமாக உள்ளன. அதன் தண்டுகள் நேராக இல்லாமல் வளைந்து நனைந்து கொடியாக காணப்படும். எவ்வளவு மழை வறட்சி என எல்லாவற்றிலும் தாங்கி தகவல் வைத்து வளரக்கூடிய மரங்களாக அவை இருக்கின்றன. பிற இடங்களில் தைல மரக்காடுகள், நிலத்தை திருத்தி விவசாயிகள் என பல்வேறு புது இனங்களை வணிக நோக்கில் பயிரிடுவதால். கோவில் காடுகள் நம்மளுடைய பாரம்பரியத்தை பறைசாற்றுபவயாக இருக்கின்றது. இதனால் எங்கெங்கெல்லாம் செல்கிறேனோ அப்போது கோவில் காடுகளையும் - சமண அடையாள சின்னங்களை பார்ப்பதும் பழக்கமாகிவிட நேற்று இளஞ்சாவூரில். இது எனக்கு அதிசயமான கோவில் தான்.  பெரும்பாலும் உருவ வழிபாட்டுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது கிராமத்து தெய்வங்கள். உருவமற்ற அருவநிலையிலே கடவுளை வணங்கும் கருப்பர் கோயில் முதலில் ந...