இடுகைகள்

பீகார் தேர்தல் - நம்பிக்கையான பின்புல புரிதல்

படம்
பீகார் தேர்தல் ஒரு கழுகு பார்வை அம்மாநிலத்தின் சமூக பொருளாதார வரலாற்று பின்புலத்தின் ஊடே புரிந்து கொள்ள வேண்டி இரக்கிறது. மகா கூட்டணியின் தோல்வி வலதுசாரி அரசியல் எதிர்பார்ப்பாளர்களை மனசு சோர்வுர செய்திருக்கு. இதை நான் நம்பிக்கையின் வெளிச்சமாக உணருகிறேன். முதலில் மோடி ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக  வாக்களிக்கவில்லை. மகா கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. ஏன் ராகுல் காந்திக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் ?  நமது சிந்தனையில் பீகார் குறித்து பல்வேறு கதையாடல்கள் ஊறி மொதுமொத்து இருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாநிலம் வெளிமாநிலங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு இடம்பெயர் இருக்கிறார்கள். கற்றல் குறைவு, பழைய பண்பாட்டு விழுமியங்களை குறிப்பாக சாதி படிநலைகள் இருக்கும் நிறைந்ததாக உள்ளது என பல பின் வாங்கிய நிலைகளை நாம் அறிகிறோம். அது உண்மையும் கூட.  தமிழகம் போன்று ஒரு கிராமத்தில் 500 பேர்களில் 450 பேர் நிலங்களை கொண்ட கிராமங்கள் அவை கிடையாது. 50 பேரிடம் மட்டுமே நிலம் இருக்கும். அப்படி என்றால் அதன் அதிகாரம் சலுகைகள் நீதி காவல்துறை பல்வேறு நிறுவன அமைப்புகளில் பொறுப்ப...

நூல் வெளியீடு & அறிமுகம்

படம்
2025 நவம்பர் 15 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட சார்பில் நூல் வெளியீடு மற்றும் அறிமுகம் நடைபெற்றது. நிகழ்வில் ராமலிங்கம் சேதுராமன் அடைக்கலம் சிவக்குமார் ஆகியோர் பாடலோடு நிகழ்வு செல்வி அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது.  நிகழ்ச்சிக்கு புரவலர் கோ சாமிநாதன் அரங்கநாதன் நூலக நிறுவனர் தலைமை ஏற்க, மாநகர செயலாளர் அடைக்கலம் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, அன்னை சௌந்தரராஜன் அவர்களின் எல்லையில்லா வானம் என்ற நூலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் செங்கோடன் வெளியிட அதனை கவிஞர் கோ கலியமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் அண்டனூர் சுரா அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கவிஞர் அஜய் அவர்களின் மழையின் சாயல் நூலினை விமர்சகர் மூட்டம்பட்டி ராஜ் அவர்களும், கவிஞர் ரேவதி ராமின் நின்று கழிக்கும் வெயில் கவிதை நூலை கவிஞர் துவாரகா சாமிநாதன் அவர்களும், எழுத்தாளர் சிவானந்தம் அவர்களின் வழிபாட்டு விழாக்களில் தமிழர் மரபு என்ற கட்டுரை நூலை எழுத்தாளர் சோலைட்சி அவர்களும் அறிமுகம் செய்ய நூல் ஆசிரியர்கள் ஏற்புரை நள்ளினர் இந்நிகழ்வி...

ஹைக்கூ

படம்

எதிர்பாட்டு :- சமீப காலங்களில் மற்றும் குழுவினர், மற்றும் பலர், மற்றும் நண்பர்கள் அல்லது மற்றும் உறவினர்கள் என்கின்ற கும்பல் மனோபாபு உளவியல் படிநிலை பண்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக மறுத்த பன்முகத்தன்மையை சிதைக்கும் குறுங்குழுவாக கெட்டிப்படும் தன்மை அதிகரிப்பதை காண முடிகிறது. இன்று தேவர் ஜெயந்தி முன்னிட்டு வாய்ச்சவடால் சற்று முன்னேறி பொதுவெளியில் அகங்காரத்துடன் தன் இருப்பை வெளிப்படுத்துகிறது. தெருக்களில் வாகனங்களில் தொங்கியவாறு இளைஞர்கள் கத்திக்கொண்டு துண்டை சுழற்றியவாறு பயணிக்கின்றனர். தனக்கு அணுக்கமான நெருக்கமான மற்றும் பலரை ஈர்க்கும் பொருட்டு திருவிழாக்கள் இல்ல நிகழ்வுகள் கட்சிக் கூட்டங்கள் இலக்கிய நிகழ்வுகள் வழிபாட்டு மன்ற நிகழ்வுகள் இப்படி பொது சமூகத்தில் கவனம் பெறாமல் தங்கள் குழுவுக்குள் சுருங்கி சுய தம்பட்டம் அடிக்கும் போக்காக மாறி வருகிறது.

ஞாயிறும் - பயணமும்

படம்
நேற்று தீபாவளி கழித்து உள்ளூர் அறிதல் நண்பர் சிவக்குமார் உடன் குன்றண்டார் கோவில்- குடைவரை சிவன் கோவில், கல்தூண் வேலைபாடுடன் கூடிய மண்டபம், மலை மீது முருகன் கோவில். மலையடிப்பட்டி திருமயம் போன்று அருகருகே சிவன் மற்றும் பெருமாள் சயனத்தில் குடைவரைக் கோயில்கள், மலைமுகடுகள். கோவில் வீரகுடி வேலைப்பாடுடன் கூடிய சமண சிற்பம். செம்பட்டூர் சமண சிற்பம். மாலையில் வீதி நூல் அறிமுகத்தில் எனது அலைகளின் நிலையும் நிழல் கவிதை தொகுப்பு  கூட்டத்தில் பங்கேற்பு என நேற்றைய பொழுது மன நிறைவாக... 

புதுக்கோட்டை 8 வது புத்தகத் திருவிழாவும் நானும்

படம்
புதுக்கோஹஹட்டை 8 வது புத்தகத் திருவிழாஹஹஹஹ இந்த ஆண்டு தாமதமாக தொடங்கினாலும் சிறப்புடன் நிறைவுற்றது. கட்டமைப்பு வசதி சிறப்பாக இருந்தது. பகல் நேரங்களில் அனத்தியது. மற்றபடி மழைக்கு சிறப்பாகவே இருந்தது. மாலை நேர நிகழ்வில் வாழ்த்துரைகள் நேரத்தை தாண்டியதாக அமைய சிறப்புரைக்கு காத்திருப்பவர்கள் மெதுவாக காணாமல் போனார்கள். எதிர்காலத்தில் சரி செய்து கொள்ள வேண்டியவை. விழாக்காலம் என்பதால் விற்பனை குறைவு என்கின்ற முனுமுனுப்பை அவதனிக்க முடிந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தன்னார்வலர்களின் உழைப்பு மதிப்பிற்கு உரியது. திட்டமிடுதல் நிதி சேகரித்தல் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்தல் அரசு நிர்வாகத்தோடு இணைந்து இலக்கை எட்டியது வாழ்த்துகள். வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த முறை இல்லையோ?  என்னுடைய நூல்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  7ம் கவிதை தொகுப்புகள் வெளியிட்டில் பங்கேற்றேன் . அஜய்குமார் கோஷின் மழைச்சாரல் , சோலச்சியின் ஆப்பாயல ஒரு அடி, மைதிலி க...