இடுகைகள்

முத்துக்குடா -புதுக்கோட்டையின் அலையாத்தி காடு

படம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடற்கரை நகரமான முத்துக்குடா அலையாத்தி காடுகள் சுற்றுலா செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் இணைந்து மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது படகு கட்டணம் தான் கூட ஆனால் நல்ல அனுபவம். எதிர்காலத்துக்கான மேம்படுத்தும் பணி அலையாத்தி காடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் வகையில் பிச்சாவரம் போன்ற ஏற்பாடுகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எவ்வாறு இருந்தபோதும் எதிர்காலத்தில் அலையாத்தி காடுகளின் நல்ல அனுபவத்தை பெறலாம். அதற்கான இயற்கை சூழல் சிறப்பாக இருக்கிறது. பறவைகளை அதிகம் காண முடிந்தது. படகு ஓட்டுநர் சிறந்த தகவல்களை நமக்கு வழங்கினார். இது ஒரு மட்டும் சென்றதால் பிறரோடு பகிர்ந்து கொண்டோம் படகு பயணக் கட்டணத்தை 20 நிமிட பயணம் கட்டணம் ஒரு படகில் 8 இருக்கைகள் ₹900. நவம்பர்- பிப்ரவரி மாதங்களில் பறவைகளை காணலாம். இது மீமிசலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில். மீமிசலில் கடற்கரை (mini beach) இருக்கிறது. காலை வேளையில் நேரடியாக மீன்கள் கொள்முதல் செய்யலாம். சேற்று இறால் என்று சொல்லக்கூடிய இறால் மீன் ரகம் அதிகாலையில் நெஞ்சளவு தண்ண...

தோழர் சந்துரு படத்திறப்பு & செம்பை மணவாளன் நினைவு சிறுகதை போட்டி பரிசளிப்பு

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் செம்பை நினைவாக சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டு முதலாம் ஆண்டு சிறப்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு என்ற ஆர் சந்திரசேகரன் அவர்களின் படத்திறப்பு புகழஞ்சலி நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வையும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்ட குழு ஏற்பாட்டில் 15 பிப்ரவரி புதுக்கோட்டையில் நடந்தது. செப்டம்பர் 22 ஆம் தேதி போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி முடிவுகளும், பிப்ரவரி 15ஆம் தேதி பரிசளிப்பு நடைபெற்றது.  121 கதைகள் ஆஸ்திரேலியா இலங்கை பம்பாய் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகமெங்கும் பரவலாக கதைகள் வந்து சேர்ந்தன. முதல் இரண்டாம் மூன்றாம் இடம் மற்றும் சிறப்பு பரிசுகள் மூன்று என ஆறு பரிசுகள் வழங்கப்பட்டன. விருத்தாளர்களுக்கு நினைவுப் பரிசு, பரிசுத் தொகை பயனடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கதைகள் குறித்து பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் அறம் கதைகள் குறித்து சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் கவிச்சுடர் இராசு. கவிதைபித்தன் அவர்கள் பொதுவுடமை தோழர்க...

விஜயவாடா பாபுஜி அருங்காட்சியகம்

படம்
பாபுஜி மியூசியம் - ஸ்ரீ பிங்கலி வெங்கைய்யா அவர்களை பாபுஜி என அழைக்கின்றனர்.  காந்தியை பாபுஜி எனும் பெயரில் அருங்காட்சியகம் நடத்துகிறார்கள் என்று நினைத்தேன். உள்ளே சென்றான் 1921 இல் விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்திய தேசியக் கொடியை வடிவமைத்து அந்தக் கூட்டத்தில் காந்தியிடம் கொடி வண்ணங்களின் பொருளை புரிந்துகொண்டு வடிவமைத்த காரியம் பாபுஜி கையளித்துள்ளார். வாட்ஸ் அப்பில் விதவிதமான புரலி அலப்பறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது விஜயவாடா பயணம். விஜயவாடா ரயில் நிலையத்தின் முகப்பில் இந்த நினைவு குறிப்பை படத்துடன் வைத்துள்ளனர். இந்தக் கட்டடம் அழகான பழைய காலத்து பிரிட்டிஷ் மாதிரியான கட்டிடம். இடம் கொடுத்த மன்னரின் கல் சித்திரம், விக்டோரியா மகாராணி உயரமான வரைபடம் இங்கு உள்ளது. 1961 ஆந்திர அரசு பாபுஜி பெயரில் இடத்தை அருங்காட்சியமாக மாற்றி உள்ளது. பழைய பாணியிலான கற்களால் அடக்கப்பட்ட கட்டிடம். அழகாக இருக்கிறது. (அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு பக்கத்தில்.)  அருகே புதுக்கோட்டை வானியலான அருங்காட்சியகம் இடம்பெற்று இருக்கிறது. நவீன வானிலான அருங்காட்சியகம் பௌத்த நினைவிடங்க...

விஜயவாடா முனைவர் அம்பேத்கர் மணி மண்டபம் ஆஹா...

படம்
விஜயவாடா முனைவர் அம்பேத்கர் அவர்களின் உயரமான சிலை அதன் ஊடே கருப்பு வெள்ளையில் பட காட்சிகளின் தொடர்ச்சி, சித்திர வேலைப்பாடுகளுடன் அவரின் வாழ்க்கை தொடர்ச்சி, அவரின் பொன்மொழிகள், இடை இடையே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் அங்காங்கே காணொளி காட்சிகள். மாநகர மையத்தில் அய்ம்பது ஏக்கருக்கும் குறையாக பராமரிப்பு பூங்கவுடன், கலை நேர்த்தியான அமைப்பு அடடாட மணி மண்டபம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக உதாரணம். (பெரியார் நகரம் இதுபோல் இருக்குமா ?) நவீனத்துவம் எல்லாம் சிறப்பு. மக்களே தவறாமல் விஜயவாடா போனால் தவறாது பார்த்துவிடுக...  ( நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.) 40 சதவீதம் பணி இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தரை தளத்தைத் தவிர மேல் தளங்களுக்கு அனுமதி இல்லை. அன்பு கூர்ந்து அதை நிறைவு செய்யும்போது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்.  அவரை வெறுப்பவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள் கொஞ்சம் மேனும் புரிந்து கொள்ளலாம். ஜெகன்மோன் ரெட்டி காலத்தில் உருவாக்கப்பட்ட சிறப்பான மண்டபம். நம்ம ஊரு மணிமண்டபங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கான வாக்கரிசி என்பது புரியும். ...

பயணம் - வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - திருமயம்

படம்