இடுகைகள்

அலைகளில் நெளியும் நிழல்... சாத்தூரில் அறிமுகம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தனுஷ்கோடி ராமசாமி நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கவிதை குறித்த உரையாடல். கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் மரு. த.அறம் அவர்களின் சாத்தூர் மருத்துவமனை மூன்றாவது தளத்தில் அமைந்த தனுஷ்கோடி ராமசாமி நினைவு குளிர்மை அரங்கத்தில் இந்நிகழ்வு 10.8.25 காலை பத்தரை மணிக்கு தொடங்கி மாலை நாலு மணி வரை உணவு உபசரிப்போடு நடைபெற்றது. பாவலர் கணேசன் அவர்களின் பாடல் கூடவே தபேலா சிறப்பாக அமைந்திருந்தது. கவிஞர் செல்லா அவர்களின் "ஒரு கூடை பூக்களும் ஒரு துளி வாழ்வும்" முதல் அறிமுகமாக துவங்கி இரண்டாவது எனது நூலும், மூன்றாவதாக கவிஞர் நாகாவின் யாரிடத்திலும் புத்தன் இல்லை இறுதியாக கவிஞர் கணேசனின் பாமரனுக்கோர் பாட்டு புதையல் என்ற நான்கு நூல்களும் அறிமுகம் விமர்சனம் என நிகழ்ச்சிக்கு இடையே கைப்பேசியை துலாவிக் கொண்டிருக்கும் கூட்டமாக இல்லாமல் எல்லோரும் கவனம் குவித்த கட்டுக்குள் நேர மேலாண்மைக்குள் அமைந்த செறிவு மிக்க உரைகள். ஏற்புரை... படைப்பாளிகள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒவ்வொரு நூலுக்கும் இரண்டு கோணங்களில் விமர்சன அணுகுமுறை அற்புதமான ஏற...

அலுக்காத சென்னை

படம்
கருத்தரங்கு  அடையார் 'சிங்கை60' கண்காட்சியும் - அதன் வழி சில அவதனிப்புகள். சமீப நாட்களில் என்னை சுற்றிய சாதியும் அதைப் பின்பற்றும் மனிதர்களின் உளவியல் பாங்கு, சொல்லாடல்கள், கலாச்சாரம் நடவடிக்கை, நுட்பமான அறம், சாதிய சாயம், உடல் அமைப்புகள், வீடுகளில் உணவுகளில் நுட்பம், ரசனைகள், சொலவடைகள் மற்றும் உடல் அமைப்பு போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்துகிறேன். அதை நீட்சியாக உயர் பொறுப்பில் இருக்கும் பெண்களின் நடவடிக்கை முடிவு திட்டமிடல் கலை நுகர்வு நுட்பம் என புத்திக் கொள்முதல் செய்கிறேன். ஆண்களைக் காட்டிலும் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்கள் தான் எந்த பொறுப்பில் தலைமைத்துவம் வைக்கிறோமோ அதற்கு உண்மையாக இருக்கிறார்கள். விரிந்த அறிவுடன் பொறுப்புணர்வுடன் நுட்பமான கலை உணர்வை வெளிப்படுத்துவது என தூள் கிளப்புகிறார்கள். நேற்றைய என்னுடைய நூல் அறிமுகம் செய்வதில், அணிந்துரை வழங்கியதில் அதற்கு முதல் நாள் சிங்கை 60 கலை கண்காட்சியில் வரவேற்றது பெண், சிங்கப்பூரில் உள்ள நான்கு பேர் தங்கள் கலை படைப்பை காட்சிப்படுத்தியிருந்தார்கள். அதில் இரு...

கருத்தரங்கு - உயர் கல்வி பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் - தீர்வுகள்

படம்
இந்தியாவில் உயர்கல்வி  பெறுவதில் மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும் கருத்தரங்கம்.  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்குப் பேரவை இணைந்து வரும் 09.08.2025 சனி மாலை சென்னையில் இந்தியாவில் கல்வி மிக வேகமாக தனியார் மயமாகி வருகிறது. வணிக மயமாகி வருகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் தங்கள் கிளைகளை இந்தியாவில் திறக்கின்றன.  இதனால் ஏழை எளிய மாணவர்களுக்கு  கல்வி எட்டாக் கனியாகி வருகிறது.  பள்ளிக் கல்வி , உயர் கல்வியும் ,தொழிற் கல்வி அனைத்தும்  தனியார் மயமாகி வருகின்றன.  உயர் கல்வி பெறத் தகுதியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றிய- மாநில அரசுகள் போதிய உயர்கல்வி நிறுவனங்களை,தொழிற் கல்லூரிகளை அரசுத்துறைகளில் உருவாக் கவில்லை. இது அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கிடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.  பள்ளிப் படிப்பை பல துன்ப துயரங்களுக்கிடையே,  இன்னல்களிடையே படித்து முடிக்கும், பல லட்சம் ஏழை மாணவர்கள் ,உயர் கல்வியை எப்படி பெறுவது என ஏங்கித் தவிக்கின்றனர்.  மிக ...

அலைகளில் நெளியும் நிழல்... நூல் வெளியீடு

படம்
நேற்றைய 'வீதி' 133 மாதாந்திர நிகழ்வு தோழர் மணிமேகலை அவர்கள் தலைமையில் அய்யா திருப்பதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து பரிசளிப்புடன் துவங்கியது. நிகழ்வில் புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனத் தலைவர் கவிஞர் எஸ் இளங்கோ அவர்களின் 10 நிமிடத்திற்கு உள்ளான இரண்டு ஆவணப் படங்கள் 3 குறும்படங்கள் திரையிடல் படத்தேர்வு அருமை. சக மனிதர்களின் உணர்வுகளை குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் கடப்பாடுகளை கடத்தும் திரைக்களமாக தேர்வு செய்தது அருமை. தேர்ந்தெடுத்த படங்களை கூட்டமாக ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அலாதியான கதையாடல் தான். யூடியூப் ரில்ஸ்கள் எவ்வளவு வந்தாலும் எல்லோரும் அமர்ந்து கூட்டமாக திரைக்கதைகளை ரசிப்பது அது பார்வையாளர்களுக்கு கடத்தும் ரசனைகள் ஏராளம் தாராளம் குறையாத ரகமே. தோழருக்கு நன்றி  பிறகு 'கொடைவள்ளல்' குறும்படத்தில் நடித்த சிறுவன் நாயகனுக்கு பாராட்டும் தொடர்ந்து இது போன்ற   கலை ஆர்வங்களை இலக்கியத் தளங்களில் விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி தாளாளரும் தமிழ் சங்க தலைவரும் தங்க மூர்த்தி அவர்களின் பங்கேற்பு நன்றிக்குறியது...

ஒட்டடை கவிதை

படம்

ஜெ.ஜெ. கல்லூரி & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சிறுகதை பயிலரங்கம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஜேஜே கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி புதுக்கோட்டை தமிழ்த்துறை இணைந்து மாணவர்களுக்கு இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கு. 14.15 ஜூலை 2025 கல்லூரி வளாகத்தில் மூன்று ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் துவங்கியது. துணைத் தலைவர் ஐயா தயாநிதி மற்றும் எழுத்தாளர் முனைவர் துவாரகா சாமிநாதன் இருவரின் சீரிய முயற்சியில் இந்நிகழ்வு சாத்தியப்பட்டது. தமிழ் தறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். கல்லூரி முதல்வர் அவர்களின் துவக்க உரையுடன் ஐந்து அமர்வுகள் சிறுகதை குறித்த அழகியல் இன அறிவியல் கூறுகள் என பல்வேறு பொருன்மைகளில் முனைவர் காமராசு துவங்கி வைத்து, கவிஞர் கண்மணி ராசா சிறுகதை பேசுபொருள் குறித்தும், அண்டனூர் சுரா அவர்களின் வட்டார எழுத்தாளர்களின் கதையாடலும் சிறுகதையின் பெண்கள் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அழகிகளும் இன வரைவியிலும் என்கின்ற பொறுமை குறித்து கவிஞர் கலியமூர்த்தி அவர்களும் நுட்பமான உரையால் மாணவர்களை பேராசிரியர்களை ஈர்ப்புடன் ஒருங்கிணைத்தனர். நிறைவுறையாக மாநில பொதுச் செயலாளர் கல்லூரி நிர்வாக...