இடுகைகள்
உயிர்சுருட்டி - வாசிப்பனுபவம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தோழர் ஆய்வாளர் பன்முகப் பரிமாணம் கொண்ட முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் ஆய்வுபுலத்தில் இருந்து புனைவு படைப்பிலக்கியத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். அவரின் முதல் நாவல் கீழத் தஞ்சையின் விவசாயப் பின்புலத்திலிருந்து கிராமப்புற பாகுபாடு உளவிலில் மையம் கொண்டுள்ள சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழலை, அதன்வழி உழைக்கும் மக்களின் பாடுகளை அகப்புற நெருக்கடிகளில் குடும்ப உறவுகளில் ஊடாட்டங்களை வட்டார வழக்கு சொற்களை கொண்டு தொடர்ச்சி மாறாது கனம் குறையாது பதிவு செய்கிறார். எனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நன்னிலம் பக்கம் என்பதால் மிக நெருக்கமான வட்டார வழக்குச் சொற்கள் இருப்பதில் வியப்பில்லை. சொற்களுக்காகவே திரும்பத் திரும்ப படிப்பேன் என நினைக்கிறேன். முருகையன் என்ற கதாபாத்திரம் தோழர் முருகையனை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கதையின் பாத்திரங்களில் நேர் எதிர் பிம்பங்கள் இல்லை சமூகத்தின் பண்பாட்டுச் சிக்கலை விவரனை செய்யும் பாத்திரப் படைப்புகளாக உள்ளன. எழுத்தாளரின் இந்த கதை மாந்தர் தேர்வு சமூக அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவரின் இனிவரும் எழுத்துக்கள் சமூக நீதியை வலியுறுத்த...
கொத்தி தின்னும் நினைவுகள் - மாநில கவிதை முகாம் , இராசபாளையம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாட்டில் ராஜபாளையத்தில் அய்யனார் அருவி அருகே சிவானந்த ஆசிரமத்தில் இரண்டு நாள் மாநில கவிதை முகாம் நடைபெற்றது. இதில் கவிஞர் சிற்பி 90, எழுத்தாளர் வண்ணதாசன் 80 ஆகியோருக்கு பாராட்டும் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு வீரபாண்டியன் வாழ்த்துரையுடன் தொடங்கியது. மாநிலத் தலைவர் கங்கா அவர்கள் தலைமையில், சிருங்கை சேதுபதி அவர்கள் சிற்பி குறித்தும், கண்மணி ராசா அவர்கள் வண்ணதாசன் குறித்தும் புகழுரை வழங்கினர். இந்நிகழ்வில் எனது நான்காவது கவிதை தொகுப்பான கொத்தி தின்னும் நினைவுகள் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு கலை இலக்கியப் பெரும் மன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் அறம் தலைவர் தோழர் கங்கா மற்றும் அனந்தகுமார் அகிலா கிருஷ்ணமூர்த்தி யவனிகா ஸ்ரீ ராம் தோழர் கண்மணி ராசா ஆகியோர் முன்னிலையில் வெளியீடு செய்யப்பட்டது. இதில் தோழர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடலும் வெளியீடு செய்யப்பட்டது. பிறகு கவிதை குறித்தான பல்வேறு பொருமைகள...