யாசிக்கிறேன்

குறிப்புகளற்ற வெளியில் 
வார்த்தை கொட்டி கிடக்கிறது. 

ஒரு குறிப்பைக் கொண்டு 
அதை அழகுற அடுக்கி புலங்காயிதம் அடைந்து 
அயர்ந்து பின் விழித்த போது 
அவை அர்த்தமற்றவையாக.
பொழிவிழந்து மங்கிப்போன குறிப்பாய் 
அங்குமிங்கும் அல்லாடி கொண்டிருந்தது.

தாயின் மன சிதைவு குழந்தையாக  
என் கவிதை கூடவே வாழ்ந்து வந்தது 
அந்த தாயை போல் 
கவிதையை தூக்கி சுமக்கிறேன். 
அடுத்தவரின் கவிதைகள் என்னை பார்த்து பரிதாபப்பட்டு 
இந்த குழந்தை கொன்று விடலாம் என்ற ரீதியில் புலம்ப

பரிதாபப்பட்டு கடந்து போகும் நீங்கள் 
என் கவிதையையும் சகித்தருள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

சிந்து நதி மக்களுக்கானது, அரசுகளுக்கானதல்ல.

த.க.இ.பெ. விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் - திருப்பூர்