1 பிப்., 2025

நூல் அறிமுகம் - த.க.இ.பெ. புதுக்கோட்டை

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் புதுக்கோட்டை அமுத கலசம் அலுவலகத்தில் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக கலையலைக்கு பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஆர். மணிமோகன் பங்கேற்பில் நடைபெற, 26.1.2025 அன்று மாலை 4.45-ல் மணிக்கு சிறுகதையாசிரியர் கோவில் குணா தலைமையில் மூன்று நூல்கள் அறிமுக விழா

 1, தோடையம் - கவிதை தொகுப்பு பிரியதர்ஷினி - புதுகை மாநகர தலைவர் முட்டாம்பட்டி ராஜ், அறிமுகம் செய்தார்

2. வேங்குடிவயல் புதினம் அண்டனூர் சுரா புதுகை மாநகர துணைச் செயலாளர் எழுத்தாளர் பாலையா அறிமுகம் செய்தார்

3, சப்த கன்னிகள் புதினம் துவாரகா சாமிநாதன் அறிமுகம் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் கோ. கலியமூர்த்தி அறிமுகம் செய்தார். 

துவாரகா சாமிநாதன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினர். 30-க்கும் குறையாத தோழர்கள் பங்கேற்ற நிகழ்வு மூன்று மணி நேரம் நடைபெற்றது. 

அரங்கம் நமக்கு வழங்கிய அமுத கலசம் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றியுடன் விழா நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை: