புதுக்கோட்டையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் மக்கள் பதிப்பான பத்து நூல் கொண்ட தொகுதி அறிமுகம் அண்ணலின் பிறந்த நாளான 14.4.25 அன்று மாவட்ட தலைநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு என் சி பி ஹெச் மண்டல மேலாளர் சுரேஷ் அவர்கள் தலைமை ஏற்க மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் நிகழ்ச்சி அறிமுகமும் செய்து வரவேற்பு அளித்தார்கள். நிகழ்ச்சி தொகுப்பு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் செய்ய, தொகுதிகளின் ஒவ்வொரு நூல் குறித்தும் எழுத்தாளர் பாலையா, தமுஎகச-வின் மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வம், அ.பெ.க.-வின் நிறுவனர் மரு. ஜெயராமன், அம்பிகா அறக்கட்டளை சந்திரா ரவீந்திரன், கஸ்தூரிரங்கன், முனைவர் சிவகவி காளிதாஸ், கவிஞர் பீர்முகமது, ஆகியோரும், சிறப்புரை கவிஞர் நா. முத்து நிலவன் த.மு.எ.க.ச. மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். கவிஞர் பெர்னாட்ஷா அவர்கள் கவிதையுடன் நன்றியுரைடன் நிறைவுற்றது. "தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுப்பு பழைய அவர்களின் நூல...
ப்ளே ஓவர் என்கின்ற உயர்மட்ட பாலங்கள், ரயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி இப்படி பல நல்ல அபிப்ராயங்கள் மனிதத் தவறுகளை அங்கீகரிக்க சிறுசிறு உப்புசப்பு இல்லாத கொண்டாட்டங்களோடு கலைந்து விடுவோம் அல்லது கலைத்துப் போகிறோம். பொது அறத்தை (கடவுளை) ஏமாற்ற மனிதர்கள் பாவனையாக தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அதே தப்பை அச்சு பிசகாமல் அழுத்தமாக செய்வது போல்... அரசுகள் தெரிந்தும் தெரியாதது போல் மக்களை தேசியவெறியால் எதிரியாக சித்தரிக்கிறார்கள். இதே நாட்டில் அன்றாடம் காட்சியாக அண்ணல் படும் விவசாயி போலவே அந்த நாட்டு மக்களும். நதி மக்களுக்கானது, உணவும் குடிமக்களுக்கானது, இதுநாள் வரை (பல நூற்றாண்டுகளாக) பரிணாமடைந்த பல்லுயிர் சூழலின் ஆதாரம் சிந்து நதி. 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்ததே. மதங்களால் தங்களுக்கிடையே நாடுகள் என்னும் பொய் கோடுகளால் சண்டையிட்டுக் கொண்டு, அறியாத உழைக்கும் மக்களை ஏமாற்றி, ஆள்பவர்களும், அதிகார உயர்குடி செல்வந்தர்கள் உலகத்தை குட்டிச்சுவராக்குகிறார்கள். பலரும் மரம...
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் மாநிலத் தலைவர் தோழர் கங்கா தலைமையில் துவங்கியது. திருச்சி பாரதி கலைக்குழுவின் மக்கள் பாடகர் தோழர் லெனின் உள்ளிட்ட ஆளுமைகளுக்கு அஞ்சலியுடன், பொதுச்செயலாளர் தோழர் அறம் வேலையறிக்கை வைத்து எதிர்கால திட்டத்தை வைத்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்புராயன் வாழ்த்துரை, சந்தா, கோவையில் நாடக பயிலரங்கம், புதுக்கோட்டையில் சிறுகதை பயிலரங்கம் மற்றும் 'ரீல்ஸ்' உள்ளிட்ட குறும்பட இயக்கம் குறித்த பயிலரங்கம் திண்டுக்கல்லில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளர் தோழர் சசிகலா மாவட்ட தலைவர் தோழர் நடராஜன் மாவட்டச் செயலாளர் ஆகியோரின் சீரிய ஏற்பாட்டில் முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. 1. ஆளும் அரசின் பண்பாட்டு சீரழிவை துணிவுடன் எதிர்த்தது பள்ளி கல்லூரி வளாகங்களை லாவகமாக பயன்படுத்துவது. 2. திருவள்ளுவர் சிலை அமைத்த 25 ஆண்டு விழா, பாரதிதாசன் விழா மற்றும் மாநில தலைநகரில் காரல்மாக்ஸ் சிலை அமைப்பு தமிழக அரசுக்கு நன்றி 3. பேராசிரியர்களுக்கு நிலுவையில...
கருத்துகள்