இடுகைகள்

சிறுகதைகள் 100 - அண்டனூர் சுரா வெளியீடு

படம்
எழுத்தாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆசிரியர் அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இரண்டு தொகுதி வெளியீட்டு நிகழ்வு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 27.9.25 மாலை தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.  நிகழ்வில் முதல் தொகுதி கவிதைப்பித்தன் அவர்கள் வெளியிட்டு விழா பேருரை நிகழ்த்தினார்கள். இரண்டாவது தொகுதியை கவிப்பித்தன்   வெளியிட்டு எழிலுரை வழங்கினார்கள். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்திருந்தன. நிகழ்வில் 250 பேருக்கும் குறையாத இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பெற்றனர்.  2004 முதல் 2024 வரையிலான இதழ்களில் நூலாக்கம் பெற்ற இணையவெளியில் வந்த சிறுகதைகளை அண்டனூர் சுராவின் சிறுகதைகள் 100 என்ற இரண்டு தொகுதிகளாக அறிமுகம் செய்தனர். சுராவின் எழுத்துக்கள் படிநிலைப் பண்பாட்டில் இருந்து சமூகத்தை சமூக நீதி என்ற சமத்துவ கோட்பாட்டை நோக்கி நகரும் அரசியலை பேசக்கூடியாதக அமைகின்றன. அந்த வகையில் தன்னைச் சுற்றிய மண்...

பாரதி முற்றம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் அறந்தாங்கி கிளை மற்றும் பாரதி முற்றம் இணைந்து ஏற்பாடு செய்த நூல் வெளியீடு, இலக்கிய சந்திப்பு அறந்தாங்கி எல்.என்., புரத்தில் மாவட்ட மதிப்புரு தலைவரும் பாரதிமுற்ற நிறுவன தலைவரும் கவிஞர் தோழர் அஜய்குமார் கோஷ் சீரிய ஏற்பாட்டில் குழந்தைகளின் பாடலோடு தொடங்கியது. நகரத் தலைவர் இலக்கிய ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை கவிதை வாசித்திட, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இருவரை கௌரவித்தல், சிறந்த ஆசிரியர்கள் பணியாளர்கள் அறிமுகம், கருத்துரைகள் என நடைபெற்றது. முனைவர் சிவகவி காளிதாஸ் அவர்களின் மேழி மற்றும் பறை = அறிவித்தல் நூல்களை மாவட்டச் செயலாளர்கள் ஒட்டடை பாலச்சந்திரன் அறிமுகம் செய்திட, நல்லாசிரியர் மு சிவானந்தம் அவர்கள் வெளியிட, முதல் பிரதிகளை ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டு விழா பேருரை ஆற்றி நிறைவு செய்தார்கள்.  நன்றியுரை அறந்தாங்கி நகர செயலாளர் சிவா அவர்கள். பிறகு உணவோடு நிறைவுற்றது

ஏட்டிக்குப் போட்டி...

படம்
1. சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் ஒருவரின்  "...குண்டு சட்டியில், கழுதை ஓட்டுகிறார்கள்... " என்று கடுப்பாக எழுதி இருந்தார்கள். வருத்தம் தரக்கூடிய பதிவு, வெற்றி பெற்றவருக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கலாம், (போட்டியில் பங்கேற்கா விரும்பாத) பிற படைப்பாளிகளை விலங்கோடு ஒப்பிடுவது சரியா? பரிசு பெறாத படைப்புகள் படைப்பு ஆகாதா? உங்கள் தராசு பாரபட்சமானது. தொகையை அளவிடுவதாக இருக்கிறது? வழங்குபவர்களின் பாரம்பரியம் குறித்து அது பேசுவதில்லை. எல்லா படைப்பாளிகளும் "தருமியாக"  இருக்க வேண்டியதில்லை. "பரிசு பெற்றால் குதிரை, பரிசு பெறவில்லை என்றால் கழுதை." 2. நடிகரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி குத்தாட்டத்துடன் அஞ்சலி செலுத்தியது. பலரை நெளிய வைத்துவிட்டதா? 3. தமிழக அரசின் இளையராஜா பாராட்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் ரஜினி குறுக்கீடும், இளையராஜாவின் 'பீர்' புராணம் தங்கள் மதிப்பை பொதுவில் தாங்களே உடைத்தது மூன்று குறித்தும் முக்கோண பார்வை எழுத்தாளர் நண்பரின் 'குதிரை' என்ற பதத்தை மாற்றி 'கழுதை' என்று எழுதினார். விலங்குகள் அதற்குரிய பரிணாமம...

சீனா- இந்திய உறவு 🤙🏽 எதிர்பாட்டு

படம்
அமெரிக்க இந்திய வர்த்தக முரண்பாடால், இந்திய சீனா நெருக்கத்தை இடதுசாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மேலோட்டமாக சரி என்று தோன்றினாலும், புவிசார் அரசியலில் நீண்ட நாள் ராஜிய உறவுக்கு நல்ல சமிக்கை அல்ல.  அமெரிக்கா ஜனநாயக நாடு,  இன்றைய இந்தியா பாசிச பாங்கோடு நடந்து கொள்கிறது. உலகெங்கிலும்  சிறுபான்மையினர் பாதிக்கப்படும் போது அரசியல் ரீதியாக அமெரிக்கா தண்டிப்பது, கண்டிப்பது, கவலை கொள்வது, அறிக்கை வெளியிடுவது என தொடர் நிகழ்வு நடைபெறுகிறது. அதனால் குறைந்தபட்ச ஜனநாயகம் இருக்கிறது. (இஸ்ரேலுடன் இணைந்து பாலஸ்தீனத்தை அழிப்பு செய்வது வேறு) ஐநா மன்றங்களில் நெறிபிறழும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலை பிற நாடுகளை உதவியுடன் தனிமைப்படுத்தும் வேலையை அமெரிக்கா செய்யும். அது பொருளாதார ஆதாயத்திற்கான உபயமாக கூட இருக்கலாம். ஆனால் சீனா அப்படி இருக்குமா? இருக்காது! தன் நலனுக்காக பிற உள்நாட்டு சிக்கல்களில் இடதுசாரி தீர்வை தைரியமாக முன் வைக்கவோ, அமுல்படுத்தவோ செய்யாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அதன் நேச நாடுகளின் பாசிச ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் இருக்கும். வினைபு...

அரு(று)கில்... சிங்கமுத்து அய்யனார்

படம்
அடப்பன்குளம் - கரையில்  சிங்கமுத்து அய்யனார் கோவில். உறவினர் எதிர்ப்போடு திருமணம் செய்து கொண்ட என் பெற்றோர்களுக்கு, அதன் வழி எங்களுக்கு வந்த இடத்தில் குலதெய்வமாகியது. சகோதர வகையில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் மொட்டை இங்கேதான் )  நாள்தோறும் நடை பயிறசி குளக்கரையில் தான். என் எழுத்துச் சிந்தனைக்கு ஆற்றுப்படுத்தும் அடப்பன்குளக் கரை. புதிய கல் கட்டுமானத்தில் குடமுழுக்கு நடந்து 50 நாட்கள் கடந்திட்டது. தெய்வ நம்பிக்கையற்ற எனக்கு, அமைதியான  குளக்கரை, கோவில், தாமரை நிறைந்த ஊரணி. வழிபடும் மக்களின் பூர்வகுடி மிச்ச சொச்சங்களும் பிடித்த ஒன்று. இப்போது திரைமறைவாக சிறுவர்கள் குளிக்கின்றனர். ஒருகாலத்தில் குடிநீர் ஊரணி, இப்போது மீன் வளர்ப்பில். ஏற்கனவே ஆக்கிரமிப்பில். உலகத்திலேயே கோனல் மானலான கரையை வடிவமைத்தவர்கள் கறைபடிந்த கைக்கு சொந்தக்காரர்கள். சூழலில் கல்வி பெறாத எளிய உழைப்பாளி மக்களின் பக்தி, எதிர்காலத்தில் தங்களின் வாரிசுகளுக்கு சவாலாக அமையும் என்பதை அறியாமலேயே பக்தி முக்த்தியில்... பொதுவாக புனரமை...

அன்பின் வழியது... நூல் அறிமுகம்

படம்
அன்பின் வழியது ... நாவல்  சசிகலா தளபதி விஜயராஜா  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு  288 பக்கம் ₹230  2025 முதல் பதிப்பு கொங்கு மண் சார்ந்த விவசாய குடும்பத்தின் வாழ்வியல், சடங்கு, சாதிய சிந்தனை, ஆணாதிக்கம் உறவுகளுக்குள்ளான மனத்தாங்கல், மூடநம்பிக்கைகள், தற்கொலை பங்கு, குடி கலாச்சார குறிப்பாக அரசு மருத்துவமனையில் சாமானியன் சந்திக்கும் இடர்பாடுகள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக நிலங்கள் மீதான பிடிப்பு, நகரமயத்தில் கரைந்த உறவினர்களின் பழைய விழுமியங்கள் மீதான நோக்கு நிலை, அன்றாடம் தமது வீடுகளில் நடைபெறும் துரோகம், கயமை, பழிவாங்கும் உணர்ச்சி அதே நேரத்தில் யாரோ ஒருவரின் அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல் என கதாபாத்திரங்களும் அதன் வழி உரையாடல்களும் சிறப்பு. எதிர் கதையாடலை குறைத்து நேர்மறையான கதாபாத்திரகளின் எழுத்தாளரின் சமூக பொறுப்பு நிறைந்த களம் மதிப்புமிக்க ஒன்று. ஆனந்தன் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்புணர்வு, நிதானம் தன் சார்ந்த உறவினர்களிடம் மேன்மையுரும் போக்கை முதன்மை கதையும் மாந்தராக தேர்வு அருமை. இப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தாமல் சமூகத்தில் உலவு...

யாத்வஷேம் - நூல் அறிமுகம்

படம்
யாத்வஷேம் - நேமிசந்த்ரா  மூலம் கர்நாடக  தமிழில்: க. நல்லதம்பி  கர்நாடகம், மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகடாமி விருது பெற்ற புதினம். எதிர் வெளியீடு, ₹ 450 ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் 'மை கேம்ப்' பளபளக்கும்? பிரதிகள் கிடைக்கின்றன. எங்கிருந்து மறுபடியும் இந்த உற்சாகம் ஏன் அவன் 'வெற்றி' ஆர்வத்தைத் தூண்டுகிறது. யாருக்கு இலட்சியமாகிறான்? ஹிட்லர் மறுபடியும் பாராட்டுக்குரியவனாகிறானா? கேள்வி என்னை வாட்டுகிறது. பயமுறுத்துகிறது 12 வருடங்களுக்கு முன்பு, கோரிப்பாளையத்து இந்த யூதர்களின் சமாதிகள், எனக்குள் ஒரு கதையப் பிறக்கவைத்தன. ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதை அது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட் முயன்றேன். அன்று பற...