இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தனின் அரிவாள் - கவிதைகள் - அறிமுகம்

படம்
புத்தனின் அரிவாள் - கவிதைகள்  அ. நிலாதரன் - ஆசிரியர்  முதல் பதிப்பு : டிசம்பர் -2024 கொம்பு பதிப்பக வெளியீடு - 2024  ₹100 - பக்கம் 64  நிலாதரனின் கவிதைகள், எரியும் குடிசைக்குள்ளிருந்து ஓடிவந்திருப்பவை; உழவுக்குப் போகாத ஏர்க்கலப்பையில் பூக்கும் பேய்க்காளன் போன்றவை. தம் துருவேறிய கதிர் அரிவாள்களை, மொழியில்வைத்துத் தீட்ட முயல்வதின் வழியே இவர் கவிதைகளை உருவாக்குகிறார். வரலாற்றின் ரத்தவாடை மிகுந்த தன் நிலத்தின் கடந்தகால நினைவுகளை மீட்டி, இந்த நூற்றாண்டுக்கான அரசியலை தன் கவிதைகளில் முன்வைக்கிறார். அதன் ஒரு பகுதியாகத்தான். உழைக்கும் மக்களின் கழனிப் பக்கமாக வரும் புத்தனின் கைகளில் அரிவாளைத் திணிக்கிறார். இந்த நூற்றாண்டு வாழ்க்கையின் ஒரு துண்டுக் காட்சியின் வழி. தமிழ்ச் செவ்விவியல் மரபையும் நிலாதரனின் இக்கவிதைகள் சித்திரமாக்கியுள்ளன. நம் திணைசார் வாழ்க்கை அதன் ஈரப்பதத்துடன் வரையப்பட்டுள்ளது. வேட்டைக்குத் தப்பிய புலியைப் போன்ற கொடுங்காமம். கவிதை வரிகளுக்கு இடையே பதுங்கித் திரிவது உயிர்த் தீயைச் சுட்டெரிக்கிறது. விடுதலை வேட்கையுள்ள வர்க்கத்தின் மூர்க்கம்கொண்ட மொழியும், கட்டுக்க...

சிந்து நதி மக்களுக்கானது, அரசுகளுக்கானதல்ல.

படம்
ப்ளே ஓவர் என்கின்ற உயர்மட்ட பாலங்கள், ரயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி இப்படி பல நல்ல அபிப்ராயங்கள் மனிதத் தவறுகளை அங்கீகரிக்க சிறுசிறு உப்புசப்பு இல்லாத கொண்டாட்டங்களோடு கலைந்து விடுவோம் அல்லது கலைத்துப் போகிறோம். பொது அறத்தை (கடவுளை) ஏமாற்ற மனிதர்கள் பாவனையாக தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அதே தப்பை அச்சு பிசகாமல் அழுத்தமாக செய்வது போல்... அரசுகள் தெரிந்தும் தெரியாதது போல் மக்களை தேசியவெறியால் எதிரியாக சித்தரிக்கிறார்கள். இதே நாட்டில் அன்றாடம் காட்சியாக அண்ணல் படும் விவசாயி போலவே அந்த நாட்டு மக்களும்.  நதி மக்களுக்கானது, உணவும் குடிமக்களுக்கானது, இதுநாள் வரை (பல நூற்றாண்டுகளாக) பரிணாமடைந்த பல்லுயிர் சூழலின் ஆதாரம் சிந்து நதி. 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்ததே. மதங்களால் தங்களுக்கிடையே நாடுகள் என்னும் பொய் கோடுகளால் சண்டையிட்டுக் கொண்டு,  அறியாத உழைக்கும் மக்களை ஏமாற்றி, ஆள்பவர்களும், அதிகார உயர்குடி செல்வந்தர்கள் உலகத்தை குட்டிச்சுவராக்குகிறார்கள்.  பலரும் மரம...

த.க.இ.பெ. விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் - திருப்பூர்

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் மாநிலத் தலைவர் தோழர் கங்கா தலைமையில் துவங்கியது. திருச்சி பாரதி கலைக்குழுவின் மக்கள் பாடகர் தோழர் லெனின் உள்ளிட்ட ஆளுமைகளுக்கு அஞ்சலியுடன்,  பொதுச்செயலாளர் தோழர் அறம் வேலையறிக்கை வைத்து எதிர்கால திட்டத்தை வைத்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்புராயன் வாழ்த்துரை, சந்தா, கோவையில் நாடக பயிலரங்கம், புதுக்கோட்டையில் சிறுகதை பயிலரங்கம் மற்றும் 'ரீல்ஸ்' உள்ளிட்ட குறும்பட இயக்கம் குறித்த பயிலரங்கம் திண்டுக்கல்லில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளர் தோழர் சசிகலா மாவட்ட தலைவர் தோழர் நடராஜன் மாவட்டச் செயலாளர் ஆகியோரின் சீரிய ஏற்பாட்டில் முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. 1. ஆளும் அரசின் பண்பாட்டு சீரழிவை துணிவுடன் எதிர்த்தது பள்ளி கல்லூரி வளாகங்களை லாவகமாக பயன்படுத்துவது.  2. திருவள்ளுவர் சிலை அமைத்த 25 ஆண்டு விழா, பாரதிதாசன் விழா மற்றும் மாநில தலைநகரில் காரல்மாக்ஸ் சிலை அமைப்பு தமிழக அரசுக்கு நன்றி  3. பேராசிரியர்களுக்கு நிலுவையில...

அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்

படம்
அடடா அருமையான மொழிபெயர்ப்பு. வேகமாக நகர்கிறது அம்பேத்கர் ஆக்கங்கள். முற்போக்கு இலக்கியங்கள் பரவலாக சென்றடையாமல் போனதற்கு முக்கிய காரணிகளில் மொழிபெயர்ப்பும் ஒன்று. பலமுறை அம்பேத்கரின் நூல்களை படிக்கும் போது ரஷ்யாவில் இருந்து மலிவுலை பதிப்பாக ராதுகா பதிப்பகத்தின் நூல்களை, இரண்டு பக்கங்களை படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் . அம்பேத்கர் நூலும் விதிவிலக்கல்ல. தட்டையான நேரடி மொழிபெயர்ப்பும், மராத்தியிலிருந்து ஆங்கில வழியாக தமிழுக்கு மொழி பெயர்த்ததும் தட்டையாகவே இருந்தது. பெரிய பராக்களாக படிக்கும்போது சோர்வாகவும் முழு பொருளை நினைவில் நிற்காமல் மறந்து விடும் உண்டு. கடந்த முறை அச்சிடப்பட்ட நீல அட்டை போட்ட கனத்த நூல்கள் கூட இந்த வகையினமே. பெரியார் தாசன் சித்தார்த்தன் என்ற புனைப்பெயரில் மொழிபெயர்த்த தாய்லாந்து பௌத்த சொசைட்டி உதவியுடன் வெளிவந்த 'தம்மம்' ஒரே மூச்சியில் படித்த நூல். அதேபோல ஆர் எஸ் சர்மா எழுதிய சூத்திரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முழுமை பெற்ற நூல். பிற அம்பேத்கர் நூலையும் நான் முழுதாக படிக்கவே இல்லை. அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மேல் என்னால் ஒரு முறை படிக்...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

படம்
புதுக்கோட்டையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் மக்கள் பதிப்பான பத்து நூல் கொண்ட தொகுதி அறிமுகம் அண்ணலின் பிறந்த நாளான 14.4.25 அன்று மாவட்ட தலைநகரில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு என் சி பி ஹெச் மண்டல மேலாளர் சுரேஷ் அவர்கள் தலைமை ஏற்க மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் நிகழ்ச்சி அறிமுகமும் செய்து வரவேற்பு அளித்தார்கள். நிகழ்ச்சி தொகுப்பு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் செய்ய, தொகுதிகளின் ஒவ்வொரு நூல் குறித்தும் எழுத்தாளர் பாலையா, தமுஎகச-வின் மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வம், அ.பெ.க.-வின் நிறுவனர் மரு. ஜெயராமன், அம்பிகா அறக்கட்டளை சந்திரா ரவீந்திரன், கஸ்தூரிரங்கன், முனைவர் சிவகவி காளிதாஸ், கவிஞர் பீர்முகமது, ஆகியோரும், சிறப்புரை கவிஞர் நா. முத்து நிலவன் த.மு.எ.க.ச. மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். கவிஞர் பெர்னாட்ஷா அவர்கள் கவிதையுடன் நன்றியுரைடன் நிறைவுற்றது. "தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுப்பு பழைய அவர்களின் நூல...

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி. நட்டம் அதிமுகவுக்கே...

படம்
"வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து, காண்டாமிருகம் பெயர் வைத்தாள்."  என்ற சொலவடை நாம் அறிந்த ஒன்றுதான். அதிமுக பாஜக கூட்டணியால் நட்டம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும் தான். எப்படி பார்த்தாலும் லாபம் பாஜகவுக்கு மட்டும். பாஜகவோடு யார் உறவு வைத்தாலும் அவர்களை கபாலிகரம் செய்து விடுவார்கள். இந்த முறை திமுகவையும் அதிமுகவை சேர்த்து சிதைத்து விடுவார்கள் என்கின்ற அச்சம் ஒரு ஓரத்தில் வரத்தான் செய்கிறது.  கடந்த 10 நாட்களாக செங்கோட்டையனை வைத்து எடப்பாடியை அசைத்து விட்டார் சந்தான பாரதி.. கண்துடைப்பு நாடகத்தில் அண்ணாமலை பலியாக்கி, அதிமுகவின் முன்னாள் நிர்வாகியை பொறுப்பாளராகி புதிய கோணத்தில் அடுரா ராமா என்று ஆட்டி வைக்கப் போகிறார் அதிமுகவை... மக்களிடம் அதிருப்தி ஆளுங்கட்சி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் என்ன செய்யப் போகிறது ? (நான் என்ன செய்வது?) சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 24 ஆவது தேசிய மாநாட்டை முடித்திருக்கிறது. அதனுடைய வரைவு அறிக்கையில் இன்றைய ஆளும் மத்திய அரசு பாசிச பண்பு கொண்டது அறுதி இட்டு சொல்லவில்லை என்று விமர்சனங்...

பாசிசம் ஒரு விவாதம்

படம்
இந்தியாவில் தற்போது அரசியல் பண்பாட்டுத் தளங்களில் மேலாதிக்கம் பெற்றுள்ள பாசிசம் எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் நுட்பமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பாசிசம் குறித்த அண்மைக்கால ஆய்வுகள் நமக்குப் பயன்படும். பாசிச அரசை நிறுவுவதில் கருத்தியல்சார் அரசு சாதனங்கள் (Ideological State Apparatuses) முதன்மையான பாத்திரத்தை வகிக்கின்றன. அவை அடக்குமுறைசார் அரசு गान (Repressive State Apparatuses) போலிஸ் , ராணுவம் முதலானவற்றிலிருந்து விலகிச் சுயேச்சையாகச் செயல்படுகின்றன. பாசிசத்தின் பிடியிலிருந்து அடக்குமுறைசார் அரசு சாதனங்களை விடுவித்தால் அது கருத்தியல்சார் அரசு சாதனங்களில் பதுங்கிக்கொண்டு மீண்டும் அடக்குமுறைசார் அரசு சாதனங்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அங்கே தனது பணியைத் தொடர்ந்து செய்யும். 1970களின் பின்பகுதியில் ஜனதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசாங்கத்தைக் கையாளும் ஆட்சி அதிகாரத்துக்குள் ஊடுருவிய பாசிஸ்டுகள், ஆட்சி அதிகாரம் போன பிறகு சிவில் சமூகம் எனப்படும் கல்வி, குடும்பம், ஊடகம், சமயம், அரசியல் கட்சிகள் முதலான கருத்தியல்சார்...

கவிதை

படம்