இடுகைகள்

பிடாரி

பல நேரம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் பிடாரியாகவும்,   சில நேரம் எதற்கும் பயனற்ற தேவதையை வலம் வரும் பிடாரிகள் நமக்கு நெருக்கமானவரிடமே நம்மீது நேசம் கொள்கிறது தேவதைகள் யாரும் என்று தெருவில் காதல் அம்பு விடுகிறார்களா ? இல்லை அறுவமான உருவத்தை காதல் என்று தேவதை என்று கற்பனையில் காட்சிப்படுத்திக் கொள்கிறேன் விழித்துப் பார்த்தால் பிடாரி பாராட்டி சீராட்டி வளத்தது முதல் முதுமையின் மருத்துவமனை சிப்பந்தி வரை பிடாரிகளின் தயவு அதிகம் தேவதைகள் கவிதைக்கு உதவலாம் ஒருபோதும் எதார்த்த துணையாக வருவதே இல்லை இந்த உலகத்தின் சரி பாதி மானிடர்கள் ஏதோ ஒரு காலத்தில் தேவதைக்காக காத்திருப்பவர்கள் தான் சிலருக்கு மட்டும் பாக்கியம் கிடைத்திருக்கலாம்  பலருக்கு ...

இதயவடிவ பழுத்த இலை ஏன் உதிர்கிறது ?

சோர்வான எனது உணர்வில் பழுத்த இதய வடிவ இலை தாலாட்டாக என் மீது அமர்ந்தது... உற்சாகம் கரைபுரண்டோட கவனம் மாற்றப்பட்ட கவிதை என் மீது லேசாக வருடியது காற்றும் பல சருகுகளை உதிர்த்தது கற்பனை கதவு இடுக்கின் வழியே எட்டி பார்க்க,  வார்த்தைகளைத் தேடி கோர்த்து ஒரு பூமாலை கட்டி விட்டேன். வாசனையற்ற பூக்களால் தொடுத்திருந்தேன்.  யாரும் சீண்டி பாக்காத ஏக்கத்துடன் தொங்கிக்கொண்டிருந்தது கவிஞர் என்ற அகங்காரம் இல்லாததால் எல்லோரிடமும் காட்ட கூச்சப்பட்டு மறைதிருந்தேன். எனக்குப் பின் தோன்றிய சில அரைவேக்காடுகள் தங்களை அரங்கேற்றிக் கொண்டு அகங்காரத்தை கொண்டாடிக் கொண்டு.. நானோ யாரும் படிக்கவில்லை என அகங்காரத்தை கூட்டிக் கொண்டு இருந்தேன் ஒரு கவிதையின் பிறப்பு எனக்குள் அகங்காரத்தை வளர்ந்திருந்தது ஒரு கவிதை கருவை எல்லோரிடம் கொண்டு சேர்த்து இருக்க வேண்டும், ஆனால் எனக்குள் அகங்காரத்தை சூழ் கொள்ள செய்தது இதய வடிவ இலை சருகு எப்போதும் உதிர்ந்து கொண்டே இருக்கிறது. என் கழிவிரக்கம் கவிதை மனம் அலங்காரம் இட்டு அரியணையில் ஏற்ற நினைக்கிறது. யாரேனும் கைத்தட்டி விட்டுப் போங்கள் பிழைத்து போகிறேன்.  கவிதைகள் நஞ்சையும் ...

அருவம்

பழைய கவிதையின் நிழல் துக்கத்தில் இருந்த என்னை விழிக்கச் செய்து ஆவியாய் கருப்பொருள் இங்கு அங்கும் அலைய வார்த்தைகளின் அடுக்குகளில் லாவகம் மறைய அர்த்தம் மட்டும் பழைய பொருளுக்கு  விளக்கம் கேட்டது இங்குதான் ஒரு பியூட்டி அறிவாளிகள் குழம்ப ஒரு முட்டாள்தனம் எல்லோரையும் பார்த்து பல்லிலித்து பதிலளிக்க அறிவாளிகள் நம்ப மறுக்க தூக்கம் கலைந்தது பழைய கவிதை ஒன்று தூக்கத்தை கெடுக்கும் என்றால் என் விழிப்பு நிலை நம்ப மறுத்து ஏளனம் செய்கிறது இருந்து விட்டுப் போகட்டும் என்றால் அடுத்த நாள் பின்னிரவில் இதே தர்க்கம் எழுதப்படாத அசைபோடும் கவிதைகள் இப்படிதான் தூக்கம் முடியும் தறுவாயில் விடாப்பிடியாக எழுப்பி கேளி செய்கிறது யாருக்கு தெரியாத இதுபோல் சம்பவங்கள் கௌரவத்தை சிதைக்காமல் தற்குறி சால்சாப்பு போதிக்கும் பாவத்தின் வருமானம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பிச்சைக்காரனாக அலைகிறேன். ஆனால் கத்தையாக நோட்டுகள் பைகளில் விழிப்பு நிலையில் பின்னிரவு புலம்பல் அறுந்து போன காத்தாடியாக மறைந்துவிடும் எங்கோ முள் மீது சிக்குண்டு போது கவனத்தில் தட்டுப்படும்

கவிதை

பொறுப்பற்றவன் எதற்கு பொருத்தமற்றவன்  படிக்காத புத்தகங்களை அடுக்கியிக்கும் அலமாரி போல வார்த்தைகளை அடுக்கும் லாவக வார்த்தையே கவிதை பல நேரில் அடுக்கப்பட்ட வார்த்தைகளின் அடுக்குகளில் புலங்காயுதம் அடைகிறேன் சில நேரம் கழிவிறக்க கருத்துக்காக புழங்காயிதம் அடைகிறேன் யாரு மற்ற வீதியில் என்னின் கவிதையை கடைவிரிக்க எண்ணுகிறேன்.  ஆம்  கவிதை ஒரு தற்குறி சால்சாப்பு.

மணிக்கூண்டு

இயந்திரகத்தில் சீரான வேகத்தில் நகரும் இயந்திரம் மனிதர்கள் கடிகாரம் என பெயரிட்டார்கள் அது எப்போதும் ஒரே வேலை செய்கிறது  ஆனால்  இந்த மனிதர்கள் சில நேரம் பதட்டமடைகிறார்கள்,  சில நேரம் நகர்ந்து விடாதா என எண்ணுகிறார்கள் வட்டியும் வாடகைக்கு மொத்த உழைப்பை அர்ப்பணிப்பு செய்கிறது கடிகாரம் ஆழ்ந்த அழகிய உறக்கத்தை அதிர்ச்சியடைய செய்கிறது இந்த அலாரம். மனித உழைப்புகள் இயல்பை தொந்தரவு செய்பவையாகவே...  வேகமாக நகரும் நொடி முள்ளுக்கு மதிப்பில்லை மெதுவாக நகரும் மணிக்கு மதிப்பு  வரிசையில் காத்திருக்கும் வேகமாகவும்  பின்னாடி நிற்பவருக்கு மெதுவாகவும் நகர்கிறது   மாய பிம்பம் எப்படி இருவருக்கும் வேறு வேறாக இருந்தது?

ஓடுகாலி பறவையின் நிதானம்...

பறவைகளின் அதிகாரம் அதன் சிறகுகள் தான்... சிறகுகள் சிதைந்த பறவையின் நிலையை ஓடுகாளி மானிடம் பெயர் சூட்டியது... அதிகாரத்தை இழந்ததன் விளைவு தினமும் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை... சக மாற்று உயிரினங்கள் எப்போதும் என்னை குறிவைத்து தாக்க தயாராகிறது.  பயமே எனது 90% வாழ்க்கையாய்... எனது அனுபவங்கள் ஏதேனும் ஒரு பறவைக்கு கடைத்திருப்பேன் ஆனால், இனம் நெருக்கடி தருணத்தில் தன்னை தகவமைக்கும் மரபாய் மாறி இருக்கும் வாய்ப்பு கிட்டிடவில்லை.  உதிர்ந்த பிறகு வளர்ந்து விடும் என நினைத்த இறகுகள் குறை பிரசவத்தால் ஓடுகாளி பறவையானே வானத்தைப் பார்க்கும் நான் பூமியை பார்க்க முடியவில்லை சகோ கூட்டாளிகளான எந்த பறவையும் என்னை ஏளனம் செய்யவோ, இறக்கப்படவோ இல்லை.  நான் யாருக்கும் உணவாகினாலும் அவர்களுக்கு பசியை போக்கிவிட முடியாது இருந்த போதும் கைவிடப்பட்டு கிழட்டு விலங்கினங்கள் என்னை சீண்டி தான் பார்க்கிறது. பைத்தியக்காரன் இரவுகள் போலவே நானும் கடக்கிறேன். என்னால் உறுதியாக சொல்லிவிட முடியும் உலகில் பேய் பிசாசு எதுவும் இல்லை என்று ஏனெனில் என் இரவு விழித்திருப்பதிலேயே தூங்குகிறது.

நிதானத்தின் பொருட்டு

பரபரப்பாக எல்லோரும் பணிக்கு சென்ற பிறகு  யாரும்மற்ற வேலையில் பொழுதைப் போக்க தெரியாத ஒரு தற்குறி கலைஞனின் பகல் நேர கனவு யாருமற்ற டீக்கடை பெஞ்சில் முடிவுறலாம் பெஞ்சில் சிந்திய டி யில் ஒரு அழகிய கவிதையை கற்பனையோடு வரைந்து கொண்டிருந்தேன் கவிதை ஒன்று கூட பிறந்து விட்டது அதற்குள்ளாக ஒரு குடும்பஸ்தனி அழுக்குத் துணி அதை அழித்தது.  சாலைகளின் வாகன இரைச்சல்கள் வெட்டி பொழுதை அழகான இசையால் வடிவமைக்கிறது பொறுப்பற்றவன் புலம்பல் ஒரு பிடி சோற்றில் முடிவடையலாம் வெட்டிப் பொழுதுகள் வரட்டுதனங்களால் இலைகளற்ற ஆலமரமாக விருச்சம் அடைகிறது. ஏனோ அதீத கற்பனை கனவுகள் எதார்த்தத்தை நினைக்க மறந்து விடுகிறது. இவன் கண்ணின் கண்ணாடி முதிர் கனிகளை கூட குமரிகளாக வடிவமைக்கிறது. குறிக்கோளற்ற குறிப்புகளின் ஏடு பெற்றுத்தாள்களை சலசலக்கிறது. கண்ணாடி முன் நின்று துல்லியமாக எண்ணி விட முடிகிறது வெள்ளை முடிகளை கணக்கில் புலி  கனவுகளில் எலி இயல்பில் கிலி